-Farook Sihan-
அரியாலை புங்கன் குளம் பகுதில் இடம்பெற்ற புகையிரத விபத்தொன்றில் புத்தூர் பகுதியினை சேர்ந்த இருபத்தியொரு வயதுடைய இளைஞர் உடல் நசுங்கி பல துண்டுகளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பி.ப இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் புத்தூர் வடக்கு புத்தூரினை சேர்ந்த ரவிச்சந்திரன் கஜீபன் [21] என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் கடுகதி புகையிரதம் மோதியே உயிரிழந்துள்ளார்.
பிரஸ்தாப இளைஞன் புகையிரத தண்டவாளம் அருகே புகையிரதம் வரும் போது புங்கன் குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நடைபாதை கட்டிற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் படுத்திருந்து புகையிரதம் ஏறி உயிரிழந்து விட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள சாவகச்சேரி பொலிசார் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் குறித்த இளைஞன் தண்டவாளத்தின் குறுக்காக படுத்திருந்ததனால் பல துண்டுகளாக உடல் சிதறி பலியாகியுள்ளார்.
0 Comments