மஸ்கெலியா ஹப்புகஸ்தன்ன தோட்டத்தில் சிறுவர்களுக்கு காலாவதியான திரிபோசா சத்துணவு பக்கட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் திகதியுடன் காலாவதியான திரிபோசா சத்துணவு பக்கட்டுகளை 27ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது. இது சம்பந்தமாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்சேய் நலத்திற்காக யுனிசெப் நிறுவனம் வழங்கும் திரிபோசா பக்கட்டுகளை காலத்திற்கு ஏற்றவாறு பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியமாகும். காலம் கடந்த பிறகு வழங்குவது சட்டவிரோத செயலாகும் என்பதுடன் இதனை உட்கொள்ளும்போது பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் களஞ்சியசாலைகளில் காணப்படும் திரிபோசா பக்கட்டுகள் அனைத்தையும் அப்பிரிவுக்கு உரித்தான வைத்திய அதிகாரிகள் இனம் கண்டு அழித்தொழிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை காலாவதியான திரி போசா சத்துணவை வழங்கியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மஸ்கலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பி.பாஸ்கர் தெரிவித்தார்.
0 Comments