Subscribe Us

header ads

காலாவதியான திரிபோசா சத்துணவு விநியோகம்


மஸ்­கெ­லியா ஹப்­பு­கஸ்­தன்ன தோட்­டத்தில் சிறு­வர்­க­ளுக்கு காலா­வ­தி­யான திரி­போசா சத்­து­ணவு பக்­கட்­டுகள் விநி­யோகம் செய்­யப்­பட்ட சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.
கடந்த 25ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான திரி­போசா சத்­து­ணவு பக்­கட்­டு­களை 27ஆம் திகதி வழங்­கப்­பட்­டுள்­ளமை சம்­பந்­த­மாக மஸ்­கெ­லியா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ளது. இது சம்­பந்­த­மாக பொலிஸார் நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.
தாய்சேய் நலத்­திற்­காக யுனிசெப் நிறு­வனம் வழங்கும் திரி­போசா பக்­கட்­டு­களை காலத்­திற்கு ஏற்­ற­வாறு பகிர்ந்­த­ளிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காலம் கடந்த பிறகு வழங்­கு­வது சட்­ட­வி­ரோத செய­லாகும் என்­ப­துடன் இதனை உட்­கொள்­ளும்­போது பக்க விளை­வுகள் ஏற்­ப­டலாம் என்றும் அச்சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும் களஞ்­சி­ய­சா­லை­களில் காணப்­படும் திரி­போசா பக்­கட்­டுகள் அனைத்­தையும் அப்­பி­ரி­வுக்கு உரித்தான வைத்திய அதிகாரிகள் இனம் கண்டு அழித்தொழிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை காலாவதியான திரி போசா சத்துணவை வழங்கியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மஸ்கலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி பி.பாஸ்கர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments