Subscribe Us

header ads

அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் - அரசுகள் செய்ய மறுப்பதை செய்யும் அன்பு நிறைந்த ஐரோப்பிய மக்கள்...



போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன. 

இந்நிலையில் அகதிகளுக்கு ஆதரவாக, நேற்று ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சுமார் 20 ஆயிரம் மக்கள் பேரணி ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளனர். இந்த பேரணியின் போது ”அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள்” என்பது போன்ற வாசகங்களை பொது மக்கள் ஏந்தி சென்றனர். 

ஒரு வாரத்திற்கு முன்பாக ஆஸ்திரியாவின் தேசிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு லாரி நின்றுள்ளது. லாரியின் பின் கதவை திறந்து பார்த்தபோது மூச்சுத்திண்றி இறந்துபோன அகதிகளின் சுமார் 71 உடல்கள் இருந்து. இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் ஜெரிமனியில் நடந்த ஒரு கால்பந்து போட்டியிலும் அகதிகளுக்கு ஆதரவாக மிகப்பெரிய பேனர்கள் காட்டப்பட்டன. அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. மேலும் சுமார் 220 அகதிகள் அந்த போட்டியை பார்க்கவும் அழைத்துவரப்பட்டனர். இதேபோல் நார்வே போன்ற பல்வேறு நாடுகளிலும் அகதிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் பல செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

ஆனால், ஒரு சாதாரண குடிமகனுக்கு இருப்பது போல பல மடங்கு அதிகமான பொறுப்பை கொண்ட அரசுகள் தான் மனித நேயமற்ற அகதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments