நாட்டிலுள்ள முக்கிய தேரர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை நடாத்திக் கொண்டிருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என ராவணா பலயவைச் சேர்ந்த இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறினார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு ஆரம்பத்தில் அழைத்தபோது, விசாரணைக்கு இடையுறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று புதுக்கடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர்கள், பொதுபல சேனாவின் பிக்குகள் என பலர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
தாம் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக பிரித் கூறுவதற்கே வருகை தந்தோம். இதில் என்ன தவறு இருக்கின்றது. எம்மீது இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் எனவும் தேரர் மேலும் கூறினார்.
0 Comments