முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு 5 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டிருந்தன.
விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மறைவாக கெஹெலிய ரம்புக்வெல்ல அவ்விடத்தை விட்டு அவசரமாக வெளியேறியுள்ளார்.
செலசினே என்ற நிறுவனத்தின் 11.4 மில்லியன் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியமை தொடர்பில் அவரிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காலை 09.30 முதல் 1.45 வரையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு வெளியேறும் போது கறுப்பு கண்ணாடிகளுடன் கூடிய அதி சொகுசு வாகனம் ஒன்றை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கேரேஜ் வாசலுக்கு கொண்டு வந்து அதில் வெளியயேறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் இவ்வாறு ஊடகங்களுக்கு மறைவாக செல்வதற்கு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளை மூடிமறைப்பதற்காக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments