Subscribe Us

header ads

புத்தளம் பத்துளு ஓயாவில் உள்ள பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா


புத்தளம் பத்துளு ஓயாவில் உள்ள பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (06) காலை 9.00 மணிக்கு மத்ரஸா மண்டபத்தில் அரபிக் கல்லூரியின் நிறுவுனர் அல்-ஹாஜ் முஹமட் தம்பி தலைமையில் இடம் பெறவுள்ளது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்தியாவின் குவாசி நீதிபதியும் பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் பிரதான ஆலோசகருமான அஷ்-ஷெய்த் பத்துல்லா முத்துக்கோயா தங்கள் அவர்களும், விஷேட அதிதியாக அரபிக் கல்லூரியின் சிரேஷ்ட ஆலோசகருமான இல்யாஸ் அப்துல் கரீம், கௌரவ அதிதிகளாக முஹமட் ஆசிக் தங்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீப் அப்துல் ஹமீட் (பஹ்ஜி), அஷ்-ஷெய்யத் முஹமட் காசிம் தங்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலர்கலந்து கொள்வதுடன் விஷேட பேச்சாளராக கொழும்பு-11 ஜாமியுல் அல்பர் இமாம் ஷெய்யத் அஹமட் முத்துவாப்பா ஆலிம் பாசி கலந்து கொள்ள இருக்கின்றார்.

இதன்போது 8 மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எஸ்.எம்.ஜாவித்

Post a Comment

0 Comments