நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் முதலீடுகளுக்கும் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று தேவையென நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முக்கியமான திருப்பு முனைக்கு நாங்கள் இன்று வந்திருக்கிறோம். தேசிய அரசாங்கம் தொடர்பாக பிரதமர் தனது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியிருந்தார். இத்தேர்தலில் போதுமான பெரும்பான்மை கிடைத்தது. எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான காரணங்களை பிரதமர் கூறியிருந்தார்.
இரண்டு பிரதான கட்சிகள் கூட்டணி அரசு ஒன்றுக்கான இணக்கப்பாட்டுக்கு வரும் பொழுது அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும். அதனை சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது.
கட்சித் தலைவர்களை அப்பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முயற்சிகளை பார்த்திருக்கின்றோம். அவற்றில் இருந்து எல்லாம் நாங்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும். அப்படியான இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல.
நாட்டில் தேசிய அரசாங்கம் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் முதலீடுகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமது கட்சிக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் அவர் இதன் போது நாடாளுமன்றத்தில் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
0 Comments