Subscribe Us

header ads

ஆசிரிய உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை

தெனி­யாய கல்வி வல­யத்­தி­லுள்ள ஐந்து தமிழ் பாட­சா­லை­க­ளுக்கும் அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட ஆசி­ரிய உத­வி­யா­ளர்­க­ளுக்கு இது வரை சம்­பளம் வழங்­கப்­ப­டாமை குறித்து விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
தெனி­யாய கல்வி வல­யத்­தி­லுள்ள தெனி­யாய புனித மத்­தேயு மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு ஒரு ஆசி­ரிய உத­வி­யா­ளரும், ஏண்போர்ட் தமிழ் வித்­தி­யா­ல­யத்­திற்கு மூவரும், அனின்­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்­திற்கு ஐந்து பேரும், பெவர்லி தமிழ் வித்­தி­யா­ல­யத்­திற்கு மூன்று பேரும், என்சல் வத்த தமிழ் வித்­தி­யா­ல­யத்­திற்கு ஐந்து பேருமாக மொத்­த­மாக 17 பேர் ஆசி­ரிய உத­வி­யா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர்.
இவர்கள் தமது கட­மையை பொறுப்­பேற்று இரண்டு மாதங்­க­ளையும் கடந்த நிலையில் இது­வரை சம்­பளம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் இவ் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்கள் அசௌ­க­ரியங்களுக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.
இது தொடர்­பாக வலய கல்வி பணி மனை­யோடு தொடர்பு கொண்டு கேட்­ட­போது மாகாணக் கல்வித் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து தகுந்த கடி­தங்கள் இது வரையில் கிடைக்­கப்­ பெ­றா­மை­யி­னால் சம்­பளம் வழங்க முடி­யா­துள்­ள­தாக அதி­காரி ஒருவர் தெரிவித்தார். 
இது தொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments