ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை நேற்று சந்தித்திருந்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தரக் குறைவாகவும், ஏளனமாகவும் பேசித் திரிந்த விமல் வீரவங்ச, இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் பகிரங்கமாக அதற்கு மன்னிப்பு கோரியதாகவும், ஜனாதிபதி சிரித்துக் கொண்டே நழுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments