அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட உள்ளார்.
இது குறித்து பேஸ்புக் நிறுவனரும், உலகின் டாப் பில்லினியர்களில் ஒருவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், “இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் கவுரவமும் அடைகிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ம் தேதி பேஸ்புக்கின் தலைமையகத்திற்கு வர இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார். உங்கள் கேள்விகளை எனது இந்த ஸ்டேடஸ்-க்கு கீழே பதிவிடுங்கள்.” என்றார்.
மார்க்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் கேள்விகளை மார்க்கின் ஸ்டேடசுக்குக் கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். மோடியின் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடியோ மார்க்கின் பேஸ்புக் பக்கத்திலும் பிரதமரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல இணையவாசிகள் ‘ பேஸ்புக்கின் கேம்ஸ் கோரிக்கையான கேண்டி கிரஷ் தொல்லை பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கரிடம் பேசி, அந்த தொல்லைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்’ என்ற ரீதியில் டுவிட்டர், பேஸ்புக்கில் பல பதிவுகளை போட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக சாதாரண கேண்டி கிரஷ் கோரிக்கை, தற்போது சர்வதேச(?) பிரச்சனையாக மாறியுள்ளது.
0 Comments