Subscribe Us

header ads

இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த மூவருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து மன்னார் கடல் மார்க்கமாக மன்னார் சிலாபத்துறைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வந்த மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலாபத்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மூன்று நபர்களையும் கஞ்சா பொதிகளுடன் கடந்த 2 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளையும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் ஆஐர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பொலிஸார்,

 கடந்த புதன் கிழமை (02) அதிகாலை மூன்று மணியளவில் மன்னார் சிலாபத்துறை பொலிசார் அல்லிராணி கோட்டைப் பகுதியிலுள்ள கடற்கரை பக்கமாக ரோந்து சென்றபோது, ஒருவர் ஒரு சில பொதிகளுடன் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டு அதை பரிசோதித்தபோது அவ் நபரிடமிருந்து 62கிலோ 637கிராம் கேரலாக் கஞ்சா இருக்க கண்டுபிடிக்கப்பட்டது.
இவ் கஞ்சாப் பொதிகள் இந்தியாவிலிருந்து ஒரு படகின் மூலம் மன்னார் கடல் மார்க்கமாக மன்னார் சிலாபத்துறை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அவைகள் உடனடியாக ஒரு வாகனத்தின் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு காத்திருந்தன

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை ஏற்றிவந்த படகு பொலிசாரிடம் சிக்கிக் கொள்ளாதபோதும் இவ் பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற அனுமதியுடன் நான்கு நாட்கள் பொலிசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு தொடர் விசாரனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என பொலிசார் மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.  

Post a Comment

0 Comments