திவுலப்பிட்டிய - கொட்டதெனியாவ பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments