கிண்டல் செய்த இரண்டு இளைஞர்களின் மூக்கை 16 வயது சிறுமி ஒருவர் உடைத்துள்ளார். இந்த அதிரடி சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள மதியாம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 இளைஞர்கள் சிறுமியை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த சிறுமி, இருவரின் மூக்கிலும் ஓங்கி குத்தியுள்ளார். இதில் அந்த இளைஞர்களின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர்கள், வலியால் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமி கூறுகையில், "எங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும் என்னையும் யாராவது ஏதாவது செய்யக்கூடும் என்று அஞ்சினேன். இதனால் கடந்த ஓராண்டாக கராத்தே கற்றேன். இந்நிலையில் அந்த 2 பேரும் என்னை பிடிக்க முயன்றனர். இதனால் அவர்களை தாக்கினேன்" என்று தெரிவித்தார்.
0 Comments