Subscribe Us

header ads

பேச்சில் மட்டுமல்ல இன ஒற்றுமை, செயலிலும் இருக்க வேண்டும் - வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்..ப.டெனீஸ்வரன்


அண்மையில்  தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் , 1990 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களையும்,இம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த புத்தளத்தின் அரசியல் மற்றும் புத்தி ஜீவிகளையும்  அங்கு சந்தித்து அவர்களோடு உரையாடினார். 

அவ்வேளை அவ் அரபுக்கலூரியின் ஸ்தாபகப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.எ.முபாறக்(றசாதி) அவர்களையும், வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்  விவசாய விசேட பாட உத்தியோகத்தர் எச்.எஸ்.அபூசாலி ஆகியோருடன் தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்கையில், 

இவ்வாறு இக் கலூரியின் மூலம் எதிர்கால சிறார்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக்கொடுப்பதோடு, ஒழுக்க நெறிகளையும் வழங்குவதை தாம் பாராட்டுவதாகவும் தெரிவித்ததோடு,இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும்,அது பற்றி தெளிவினையும்.மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியினை செய்யும் பணியிளை மேற்கொள்ளக் கூடிய மதத் தவைர்கள் இங்கு உருவாகுவதும் காலத்தின் தேவையென்றும் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

 மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் உள்ளிட்ட ஏனைய  மாவட்டங்களில் வாழும்  முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறும் தாம் அழைப்பதாகவும், தமது காலத்தில் தாம் வடக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் இனம்  என்பதை கடந்து நாம் அனைவரும் வடக்கு மக்கள் என்னும் ஓர் பார்வையிலே சேவையாற்றுவதாகவும் கூறினார்.
மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் பீதியுற்ற மக்கள் எந்த இனமாக இருந்தாலும் அவர்களுக்கு  பணியாற்றுவது இறைவன் கொடுத்த வரம் என்பதை எல்லோரும் புரிந்த கொள்ள வேண்டும் எனபதில் தாம்  முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வெறுமனே பேச்சில் மட்டுமல்ல இன ஒற்றுமை என்பது அது நமது செயல்ப்பாட்டிலும் இருக்கவேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

இடம் பெயர்ந்து நீண்ட காலமாக வசித்துவரும் மக்களின் தேவைப்பாடுகள் குறித்து முபாறக் றிசாதியும் இதன் போது விளக்கமளித்தார்.

-Irshard Rahumathullah-



Post a Comment

0 Comments