Subscribe Us

header ads

சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

பி. முஹாஜிரீன்



பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்  சனிக்கிழமை (05) மாலை அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற;றது.

கல்லூரியின் அதிபர் அஸ்ஸெய்க் ஏ.ஆர். முகம்மது றமீன் (மதனி) தலைமையில் நடைபெற்ற இவ்வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கல்லூரியின் பணிப்பாளர் சபை மற்றும் மகாமைத்துவ சபை தலைவர் அஸ்ஸெய்க் எம்.எஸ். அப்துல் ஹபீல், ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பொது அதிபர் அஸ்ஸெய்க் ஐ.எல்.எம். ஹாஸிம் ஸ_ரி (மதனி),சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ. உதுமாலெவ்வை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் பலர் இலங்கையின் பல பிரதேசங்களிலுமிருந்து வருகை தந்தனர்.

இக்கூட்டத்தில் பின்வருவோர் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் - பி.எம். ஜூனைத் (ஸஹ்வி), செயலாளர் - எம்.எச்.எம். அஜூர் (ஸஹ்வி), பொருளாளர் - யு.கே. ஜமால் முகம்மது (ஸஹ்வி), உப தலைவர் ஏ.எல். பைசல் (மதனி), உப செயலாளர் ஐ.எல்.எம். யாசீன் (ஸஹ்வி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிருவாக உறுப்பினர்களாக எம்.ஏ. முபீன் (ஸஹ்வி), எம்.பி.எம். இத்ரீஸ் (ஸஹ்வி), ஏ.ஆர். சிபான் (மதனி), எம்.பி. நிஜாம் (ஸஹ்வி), ஓ.எல்.எம். முபாறக் (ஸஹ்வி), எம்.எஸ்.எம். அர்ஸத் (ஸஹ்வி), எஸ்.எம். நழீம் (ஸஹ்வி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
 
இக்கூட்டத்தில் அறபுக் கல்லூரியின் அபிவிருத்தி பற்றிய முக்கிய வேலைத்  திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டன. குறிப்பாக பழைய மாணவர் சங்கத்திற்கு வங்கிக் கணக்குத் திறத்தல், ஒவ்வொரு அங்கத்தவரும் ரூபா 300 இற்கு மேற்பட்ட தொகையை மாதாந்த சந்தாவாக செலுத்ததல் ஆகிய முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

மேலும், ஒரு வருட அயுட்காலத்தைக் கொண்ட இச்சபையின் அடுத்த வருடாந்தப் பொதுக் கூட்டம் அடுத்த வருட ரமழான் மாதத்தில் நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டதாக அதிபர் அஸ்ஸெய்க் ஏ.ஆர். முகம்மது றமீன் (மதனி) தெரிவித்தார்.




Post a Comment

0 Comments