Subscribe Us

header ads

ரணில் – மோடி இன்று சந்திப்பு


இந்­தி­யா­வுக்­கான மூன்று நாள் உத்­தி­யோக­ பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று செவ்­வாய்க்­கி­ழமை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.
இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வினை பலப்­ப­டுத்­திக்­கொள்ளும் முக­மா­கவே இச்­சந்­திப்பு ஈடம்­பெ­ற­வுள்­ளது.
வெளிவி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிர­தமர் நரேந்­திர மோடி,இந்­திய குடி­ய­ரசுத் தலைவர் பழ­ரனாப் முகர்ஜி ஆகி­யோ­ருடன் இடம்­பெ­ற­வுள்ள இச்­சந்­திப்­பு­களின் பின்னர் உடன்­ப­டிக்­கை­களும் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் காங்­கரஸ் தலைவி சோனியா காந்தி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெற்­றோ­லிய வள அமைச்சர் தர்­மேந்­திர பிரதான் உள்­ளிட்ட பரை­மு­கர்­க­ளு­டனும் சந்­திப்­புகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு ஹைத­ராபாத் இல்­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த சந்­திப்பின் போது வௌ்விவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம உள்­ளிட்­டோரும் கலந்­து­கொள்வர்.
தேசிய அர­சாங்­கத்தின் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது முத­லா­வது உத்­தி­யோக புர்வ விஜ­ய­மா­கவே இந்­தி­யா­வுக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 195 என்ற விமா­னத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை மாலை 5.45மணிக்கு புது­டில்லி இந்­தி­ரா­காந்தி சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அவ­ரது பாரியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட பிர­மு­கர்­களை இந்­திய வர்த்­தக மற்றும் கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் வர­வேற்றார்.
இதன் பின்னர் மாலை 6.15க்கு புது­டில்லி சர்­தார்­பட்­டேலில் அமைந்­துள்ள தாஜ் பெலஸ் ஹோட்­ட­லுக்கு வரு­கை­தந்த பிர­த­ம­ருக்கும் அவ­ரது பாரியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் விஷேட வர­வேற்பு நிகழ்வு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இங்கு ஹோட்டல் முகா­மை­வத்­துவம் சார்பில் வர­வேற்­க­ளிக்­கப்­பட்­ட­துடன் இந்­தி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­ணி­க­ரா­லயம் சார்பில் சிறு­வர்­களால் வெற்­றிலை வழங்கி வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.
இந்­திய விஜயம் மேற்­கொண்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான இக்­கு­ழுவில் வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம, பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, இந்­தி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னிகர் எசல வீரக்கோன், பிர­த­மரின் ஊடக மேல­திக செய­லாளர் சமன் அத்­தா­வுட ஹெட்டி, வௌிவி­வ­கார அமைச்சின் செய­லாளர் டேனியல் அல்­போன்சஸ் ஆகி­யோரும் அடங்­கி­யுள்­ளனர்.
சுஸ்­மா­வுடன்
இதே­வேளை வௌ்விவ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இன்று காலை 8.20 மணிக்கு புது­டில்லி இந்­தி­ரா­காந்தி சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கு­கிறார். இதன் பின்னர் காலை 10.00 இந்­திய வௌிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜூடன் தாஜ் பெலஸ் ஹோட்­டலில் சந்­திப்பு ஏற்­பா­டா­கி­யுள்­ளது. இந்த பேச்­சு­வார்த்தை பிர­த­மரின் தலை­மையில் இடம்பெறும்.
மோடியுடன்
இதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
சுஸ்மா சுவராஜூடன் பேச்சுக்களை மேற்கொள்ளும் பிரதமர் தலைமையிலான இலங்கைக் குழு, 11.30 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விஷேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

Post a Comment

0 Comments