பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவை விசாரணை செய்வதற்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்கமைய எதிர்வரும் வாரத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவை குற்றவியல் விசாரணைப் பிரிவு நான்காம் மாடிக்கு அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை தாஜுதீனின் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் ஷிரந்தி ராஜபக்ஷ பயன்படுத்திய டிபெண்டர் வாகனம், மேலும் பல குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளமை விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குற்றவியல் விசாரணைப் பிரிவுவின் தகவல்கள் தெரிவிகின்றன.
ஷிரந்தி ராஜபக்ஷவின் பாவனைக்காக செஞ்சிலுவைச் சங்கம் குறித்த டிபெண்டர் வாகனத்தை வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாய வெளியிட்டிருந்த நிலையியல், மஹிந்த தரப்பு குறித்த குற்றச்சாட்டை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DC)
0 Comments