Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 15


1789: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது) 

1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம்  மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது. 

1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன. 

1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 

1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது. 

1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி. 

1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி. 

1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ். 

1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது. 

1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி. 

Post a Comment

0 Comments