Subscribe Us

header ads

அஸ்தமித்த ஆலமரத்திற்கு வயது 15 (தலைவர் அஸ்ரப் நினைவு தினக்கவிதை)


செப்டம்பர் 16-இது 
சமாதானம் செத்துப்போன-நாள் 
முஸ்லிம்களின் முகவரி -தொலைந்த நாள் 
முள்ளந்தண்டும்,
மூளையும்,
முன்னானும் 

இல்லாத முசிபத்துகள்-எல்லாம் 
தலைவனாக உருவான நாள் !!!

ஒரு காங்கிரசை உருவாக்கி 
பல லட்சம் போராளிகளை 
பதுக்கிவைத்த சாணக்கியம் 
சிதறிப்போன- நாள் 

ஆயுதத்தால் துளைக்க முடியா 
பல தடைச்சுவர்களை 
வாயால் தகத்தேரிந்த கல்விமான் 
மறைந்த நாள் !!

நானனும் நீயும் 
நீயனும் நானும்- நாமான
நாமம் மறைந்த நாள் !! 

நல்ல எதிரிகளையும் 
நாவார பாராட்ட தெரிந்த 
பாராளுமன்ற ஒலி 
ஓய்ந்த-ஒரு நாள் 

சம்மாந்துரையூர்- தந்த 
சரித்திர மகனே
நீ-பிறந்த மண்ணில் பிறந்ததற்காய் 
பெருமைப்படுகிறேன்.......!!

அமைச்சராய் நானும் 
ஒருநாள் வரலாம் 
நீ- செய்த சேவையில் 
துளி செய்தாலும் 
கின்னஸில் என்பெயரும் 
நிச்சயம் வரும்......!!

நீ-நின்று பேசினால் 
இனவாதம் தலை கவிழ்க்கும்,
பிரதேச வாதம் ஓட்டம் பிடிக்கும் 

பின்னால புறம்பேசினாலும் 
உன்-முன்னால 
சகலரும் சாந்தமே....!!

தலைவா !!
உனக்கு கொபியனானும்- நண்பன்தான் 
கோப்பி கடை கனானும்- நண்பன்தான் 

துறைமுகம் முதல் 
பல்கலை வரை- உன் பெயர் சொல்லும் 
அது உன்னால் மட்டுமே -முடியும்.

ஒன்றரை தசாப்தம்
கடந்துவிட்டது 
நீ - தந்த காங்கிரசும் கரைந்து விட்டது.......!!

உன் விரலுக்கு தெரிந்த 
மொழி கூட -எம் 

புதுத்தலைவர்களுக்கு தெரியவில்லை 

கட்டுநாயக்க மலைமொகடு 
கண்ணிர் சிந்துகிறது 
உன் குதிரத்தின் 
வாசம் முகர்ந்ததால் 

மில்லியன் கணக்கான வழக்குகளில் 
உன் வழக்கும் ஓன்று 
மரணமா? இல்லை கொலையா என.....!!

தேர்தல் காலத்தில்- நீ 
தவறாமல் வருகிறாய் 
என்வீட்டு சுவத்திலும் 
சிரிக்கிறாய்...!!

ஆடும்,மாடும் உன்னை தின்கிறது 
அப்போதும்- நீ சிரிக்கிறாய் 

சிங்கம் -உன் கர்ச்சனை 
இல்லாத பாராளுமன்றம் 
காமடி அரங்கமாகி -கிடக்கிறது 

குள்ள நரிகளெல்லாம் 
கும்மாளம் போடுகிறது 
உன் கதிரைக்கு 
சொந்தம் கொண்டாட......!!

குருதியை பசளையாக்கி 
கண்ணீரை தண்ணீராக்கி 
நீரும் சமூகமும் 
வளர்த்த இயக்கம் 
இன்று யானைக்கடையில் 
அடமானம்.......?

அடமானம் மீட்க 
நீ - வராதே 
அரசியல் சாக்கடையில் 
குப்பைகள் கூடி விட்டது......!!

இறைவன் ஜன்னத்தில் 
பிர்தௌஸ் உனக்கு தந்திட 
நான் பிராத்திக்கிறேன்.......!!

அடமானம் மீட்க 
நீ - வராதே 
அரசியல் சாக்கடையில் 

குப்பைகள் கூடி விட்டது......!!

அல்லாஹ் 
பாவங்களை மன்னித்து 
கருணைக்கதவை-திறந்து கொடு 

அவர் இங்கு கஷ்டப்பட்டுவிட்டார் 
கருணைப்பார்வையை 
அவர் மீது திருப்பிவிடு ........!!


ஆமீன்...! ஆமீன்......!!
கலைமகன் ஹுதா உமர்  மாளிகைக்காடு

Post a Comment

0 Comments