செப்டம்பர் 16-இது
சமாதானம் செத்துப்போன-நாள்
முஸ்லிம்களின் முகவரி -தொலைந்த நாள்
முள்ளந்தண்டும்,
மூளையும்,
முன்னானும்
இல்லாத முசிபத்துகள்-எல்லாம்
தலைவனாக உருவான நாள் !!!
ஒரு காங்கிரசை உருவாக்கி
பல லட்சம் போராளிகளை
பதுக்கிவைத்த சாணக்கியம்
சிதறிப்போன- நாள்
ஆயுதத்தால் துளைக்க முடியா
பல தடைச்சுவர்களை
வாயால் தகத்தேரிந்த கல்விமான்
மறைந்த நாள் !!
நானனும் நீயும்
நீயனும் நானும்- நாமான
நாமம் மறைந்த நாள் !!
நல்ல எதிரிகளையும்
நாவார பாராட்ட தெரிந்த
பாராளுமன்ற ஒலி
ஓய்ந்த-ஒரு நாள்
சம்மாந்துரையூர்- தந்த
சரித்திர மகனே
நீ-பிறந்த மண்ணில் பிறந்ததற்காய்
பெருமைப்படுகிறேன்.......!!
அமைச்சராய் நானும்
ஒருநாள் வரலாம்
நீ- செய்த சேவையில்
துளி செய்தாலும்
கின்னஸில் என்பெயரும்
நிச்சயம் வரும்......!!
நீ-நின்று பேசினால்
இனவாதம் தலை கவிழ்க்கும்,
பிரதேச வாதம் ஓட்டம் பிடிக்கும்
பின்னால புறம்பேசினாலும்
உன்-முன்னால
சகலரும் சாந்தமே....!!
தலைவா !!
உனக்கு கொபியனானும்- நண்பன்தான்
கோப்பி கடை கனானும்- நண்பன்தான்
துறைமுகம் முதல்
பல்கலை வரை- உன் பெயர் சொல்லும்
அது உன்னால் மட்டுமே -முடியும்.
ஒன்றரை தசாப்தம்
கடந்துவிட்டது
நீ - தந்த காங்கிரசும் கரைந்து விட்டது.......!!
உன் விரலுக்கு தெரிந்த
மொழி கூட -எம்
புதுத்தலைவர்களுக்கு தெரியவில்லை
கட்டுநாயக்க மலைமொகடு
கண்ணிர் சிந்துகிறது
உன் குதிரத்தின்
வாசம் முகர்ந்ததால்
மில்லியன் கணக்கான வழக்குகளில்
உன் வழக்கும் ஓன்று
மரணமா? இல்லை கொலையா என.....!!
தேர்தல் காலத்தில்- நீ
தவறாமல் வருகிறாய்
என்வீட்டு சுவத்திலும்
சிரிக்கிறாய்...!!
ஆடும்,மாடும் உன்னை தின்கிறது
அப்போதும்- நீ சிரிக்கிறாய்
சிங்கம் -உன் கர்ச்சனை
இல்லாத பாராளுமன்றம்
காமடி அரங்கமாகி -கிடக்கிறது
குள்ள நரிகளெல்லாம்
கும்மாளம் போடுகிறது
உன் கதிரைக்கு
சொந்தம் கொண்டாட......!!
குருதியை பசளையாக்கி
கண்ணீரை தண்ணீராக்கி
நீரும் சமூகமும்
வளர்த்த இயக்கம்
இன்று யானைக்கடையில்
அடமானம்.......?
அடமானம் மீட்க
நீ - வராதே
அரசியல் சாக்கடையில்
குப்பைகள் கூடி விட்டது......!!
இறைவன் ஜன்னத்தில்
பிர்தௌஸ் உனக்கு தந்திட
நான் பிராத்திக்கிறேன்.......!!
அடமானம் மீட்க
நீ - வராதே
அரசியல் சாக்கடையில்
குப்பைகள் கூடி விட்டது......!!
அல்லாஹ்
பாவங்களை மன்னித்து
கருணைக்கதவை-திறந்து கொடு
அவர் இங்கு கஷ்டப்பட்டுவிட்டார்
கருணைப்பார்வையை
அவர் மீது திருப்பிவிடு ........!!
ஆமீன்...! ஆமீன்......!!
கலைமகன் ஹுதா உமர் மாளிகைக்காடு
0 Comments