Subscribe Us

header ads

149ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த பொலிஸ் நடமாடும் சேவை (PHOTOS)

(எம்.எம்.ஜபீர்)


149ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த பொலிஸ் நடமாடும் சேவை 15ஆம் கொளனி பல்தேவைக் கட்டிடத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் நற்சான்றிதழ், காலங் கடந்த இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகள்,  கிராம சேவை உத்தியோகத்தரால் வழங்கப்படும் நற்சான்றிதழ், பொலிஸ் முறைப்பாட்டு பிரதி, கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு ஊடாக பெரும்பாலான  பிராச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதுடன், பயன்தரும் மரக்கன்றுகளும் பொதுமக்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பொலிஸ் நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.கலீல், சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.சாஹிர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்




Post a Comment

0 Comments