நீங்கள் அனைவரும் இரண்டு வருட காலமாய் இந்த அமைப்பை உருவாக்கி எந்தளவுக்கு சமூகத்திற்காய் பாடுபடுகிறீர்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தவிற்கு எதிராய் செயல்படுகிறீர்கள் என்ற காரணத்தால் அடிப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்தே சிறைக்கும் அனுப்பபட்டீர்கள் ...
அப்பொழுது உங்களை படித்தவர்கள் என்றும், செயல் வீரர்கள் என்றும் புகழ்ந்தவர்கள் இன்று தீயவர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் இகழ்வதை காணும் போது இப்படி ஒரு சமூகத்திற்கா நீங்கள் தொண்டு செய்ய ஆயத்தம் ஆனீர்கள் என்று ஒரு பக்கம் தோன்றினாலும் இன்னொரு பக்கம் இது உலகின் பலருக்கும் நடந்த ஒன்று என்று ஆறுதல் அடைகிறேன்...
நடந்து முடிந்த பொது தேர்தலில் நீங்கள் களம் இறங்கியது தவறு என்றும் , உங்களால் தான் உறுப்பினர் இல்லாமல் ஆகியது என்றும் குற்றம் சாட்டுவோர் கடைசி கட்டத்தை மட்டும் வைத்தே உங்களை விமர்சிக்கிறார்களே ஒழிய ஆரம்பத்தில் இதை உருவாக்க யாரெல்லாம் கை உயர்த்தினார்கள் , ஏன் இடையில் கழுத்தறுத்து விட்டு ஓடினார்கள் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்க தவறி விட்டனர்...
ஆனால், துரதிஷ்டம் என்னவெனில் கழுத்தறுப்பு செய்து விட்டு ஓடிய இவர்களின் பேச்சுக்கள் தான் சமூகத்தில் ஏற்று கொள்ளப்பட்டது.
படித்த ஆசான்கள்,சட்டத்தரணிகள்,வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் ,இன்னும் பல கல்விமான்களான உங்களது புள்ளி விபரங்களையும், கடந்த கால தரவுகளையும் கண்டு கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை...
பதவி,பணம்,வியாபார விருத்தி ,சுயநலம் இப்படி பல காரணங்களுக்காய் உங்களை விட்டும் தூரமாகி பிற அரசியல்வாதிகளின் முகவர்களாய் செயல்ப்பட்ட 'வைத்தியர்களின்,தொழில் அதிபர்களின், அரசியல் வாதிகளின்,கைக்கூலிகளின் சொற்களையும் ,பொய்களையும் ஏற்றுக்கொண்ட 'மகா ஜனங்கள்'...
பணம் படைதவர்களினதும்,உயர் ரக வாகனங்களில் உலா வருபவர்களதும் சொற்களை கேட்ட மக்களுக்கு மிதி வண்டிகளிலும் ,சாதாரண தொழில் செய்கின்ற நடுத்தர வர்க்கமான உங்களதும் சொற்களை ஏற்று கொள்ள முடியாது போனது.
கவனமாய் காய்களை நகர்த்துங்கள் ,உங்கள் இலக்குகளை வரையறை செய்யுங்கள்...
கற்பிட்டி
23.08.2015


0 Comments