சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக இருந்ததாக கூறப்படும் யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண சதீஸ் என்ற நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் கார்த்திகா, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது இரகசிய காதலன் கொழும்புக்கு வந்து வசித்து வந்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் இவர்கள் வசித்து வந்துள்ள நிலையிலேயே கடந்த ஜூலை 22 ஆம் திகதி அவ்விருவரும் செட்டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் வசிக்க வந்துள்ளனர்.
இதன் போது கேஸ் அடுப்பு, அரிசி, ஏனைய வீட்டு பலசரக்கு பொருட்களையும் அவர்கள் கொண்டுவந்துள்ளதுடன் ஒரு நாளைக்கு 700 ரூபா வாடகையின் அடிப்படையிலேயே அங்கு தங்கியுள்ளனர்.
கார்த்திகாவின் பெயரிலேயே அறை வாடகைக்கு பெறப்பட்டுள்ளதுடன் கிருஷ்ண சதீஷ் தன்னிடம் அடையாள அட்டை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இவர்கள் தங்கியிருந்த குறித்த லொஜ்ஜின் அறையானது குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் சில தடயங்களும் மீட்கப்பட்டன.
கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை 12.15 மணிக்கும் அதிகாலை 12.18 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த நபர் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான பெட்டியுடன் தங்குமிடத்திலிருந்து வெளியேறுவது சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments