Subscribe Us

header ads

பயணப் பொதியில் மீட்கப்பட்ட பெண்: சந்தேக நபர் அகப்பட்டார்

கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்த சந்தேக நபர் சற்றுமுன்னர் மன்னார் கோவில் குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சடலமாக மீட்கப்பட்ட பெண்­ணுடன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஒன்­றாக இருந்­த­தாக கூறப்­படும் யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த கிருஷ்ண சதீ­ஸ் என்ற நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­படும் கார்த்­திகா, கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது இர­க­சிய காதலன்  கொழும்­புக்கு வந்து வசித்து வந்­துள்ளார்.
வத்­தளை பிர­தே­சத்தில் வாடகை வீடொன்றில் இவர்கள் வசித்து வந்­துள்ள நிலை­யி­லேயே கடந்த ஜூலை 22 ஆம் திகதி அவ்­வி­ரு­வரும் செட்­டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் வசிக்க வந்­துள்­ளனர். 

இதன் போது கேஸ் அடுப்பு, அரிசி, ஏனைய வீட்டு பல­ச­ரக்கு பொருட்­க­ளையும் அவர்கள் கொண்­டு­வந்­துள்­ள­துடன் ஒரு நாளைக்கு 700 ரூபா வாட­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அங்கு தங்­கி­யுள்­ளனர்.
கார்த்­தி­காவின் பெய­ரி­லேயே அறை வாட­கைக்கு பெறப்­பட்­டுள்­ள­துடன் கிருஷ்ண சதீஷ் தன்­னிடம் அடை­யாள அட்டை இல்லை என குறிப்­பிட்­டுள்ளார்.
எவ்­வா­றா­யினும் இவர்கள் தங்­கி­யி­ருந்த குறித்த லொஜ்ஜின் அறை­யானது குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸா­ரினால் கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் சில தட­யங்­களும் மீட்­கப்­பட்­டன.
கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதி­காலை 12.15 மணிக்கும் அதி­காலை 12.18 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குறித்த நபர்  3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உய­ர­மான  பெட்­டி­யுடன் தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது சீ.சீ.ரீ.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments