“காய்ந்துப் போன நதியெல்லாம் வற்றாத கடலைப் பார்த்து ஆறுதலடையும், ஆனா, அந்தக் கடலே காஞ்சுப் போனா..” என்ற புகழ்பெற்ற வசனத்தை நினைவு படுத்துகிறது இணையத்தில் உலவும் லண்டனின் பேரழிவுப் புகைப்படம்.
பிரசித்தி பெற்ற தேம்ஸ் நதி, டைன் பாலம் என்று லண்டனின் புகழ்பெற்ற அடையாளங்களாக விளங்கும் நிலப்பரப்புகளில் பேரழிவு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கலைப்படைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் உண்மையிலேயே லண்டனில் பேரழிவு ஏற்பட்டதைப் போல் தத்ரூபமாக உள்ளன. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
0 Comments