Subscribe Us

நாட்டை வழிநடத்தக்கூடிய பரிசுத்தமான பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும்


நாட்டின் அனைத்து வளங்­களை பகிர்ந்­து­கொண்டு ஒற்­றை­யாட்­சிக்குள் மூவின இனத்­த­வர்­களும் வாழ்­வ­தற்­கான வழி­வ­கை­களை புதிய அர­சாங்கம் செய்­ய­வேண்டும் என நீதி­யான சமூ­கத்­திற்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வர் மாது­லு­வாவே சோபித தேரர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் நாட்டை வழி­ந­டத்தக் கூடிய பரி­சுத்­த­மான பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும். இதன்­பி­ர­காரம் தேர்­தலில் ஒழுக்­க­மா­ன­வர்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்­டினார்.
பிட்டகோட்டே­யி­லுள்ள சோலிஸ் ஹோட் ­டலில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
நாட்­டிற்கு உகந்த சட்­டத்தை உரு­வாக்கும் மன்­ற­மான பாரா­ளு­மன்­றத்­திற்கு ஊழல் மோச­டி­க­ளு­டனும் போதைப்­பொருள் வர்த்­த­கத்­து­டனும் தொடர்­பு­டை­யோரே முன்பு அதனைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினர். இதன் ­கா­ர­ண­மாக இலங்கை பாரி­ய­ளவில் பின்­ன­டைவை எதிர்­கொண்­டது மாத்­தி­ர­மின்றி போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் கேந்­திர நிலை­ய­மா­கவும் மாறி­யது.
எனவே, இந்த நிலை­மையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும். பாரிய மாற்­ற­மொன்றை நாட்டில் ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. பரி­சுத்­த­மான பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்க வேண்டும்.
அதே­போன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முன்­வைத்த மஹிந்த சிந்­த­னையின் பிர­காரம் எந்த வாக்­கு­று­தி­யையும் நிறை­வேற்ற முனை­ய­வில்லை. மக்­களை ஏமாற்­று­வ­தி­லேயே குறி­யாக இருந்தார்.
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக ஒழித்துக் கட்­டு­வ­தாக கூறினார். 17 ஆவது திருத்­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறினார். எனினும் ஒன்­றை­யேனும் நிறை­வேற்­ற­வில்லை.
இதன்­கா­ர­ண­மா­கவே நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது­வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிறுத்தி வெற்றி பெற்றோம். எனினும் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற­வில்லை. மாறாக நாமே வெற்­றி­பெற்றோம்.
இருந்­த­போ­திலும் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நாம் முன்­வைத்த எந்த கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதற்கு பெரு­ம­ளவில் இடை­யூறு விளை­விக்­கப்­பட்­டது. எனினும் புதிய பாரா­ளு­மன்­றத்தில் இந்த மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுவோம்.
எனவே நாட்டில் உரு­வாகும் புதிய அர­சாங்கம் அதன் அனைத்து வளங்­களை பகிர்ந்துகொண்டு ஒற்றையாட்சிக்குள் மூவின இனத்தவர்களும் வாழ்வதற்கான வழி வகைகளை செய்யவேண்டும்.
மேலும் நாட்டை வழிநடத்தக் கூடிய பரிசுத்தமான பாராளுமன்றம் உருவாக் கப்பட வேண்டும். இதன்பிரகாரம் தேர்த லில் ஒழுக்கமானவர்களை பாராளுமன்றத் திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments