வெள்ளிகிழமை விடுமுறையில் காடே கலைக்கட்டியிருந்தத்து. தமது மதிய உணவினை
நிறைவு செய்துகொண்ட அனைவரும் காட்டினில் காலார சுற்றிக்கொண்டிருந்த போது
யானையாரும் ஒட்டகத்தாரும் நேர் எதிரே சந்தித்துக்கொண்ட வேளை இடம்பெற்ற உரையாடல் உங்களுக்காக.
யானையார்: என்னவாம், எப்படி போகுதுது எங்கவூரு எலக்சன் நெலவரம்,
நயமா நாளும் இல்லயே யா
ஒட்டகத்தார்: யா, ஒங்களுக்கு தெரியாததா.. சும்மா
சொல்லுங்களே கேட்போம்
யானையார்: என்ன செய்றது, மக்களுக்க்குத்தான் கொஞ்சம்
வெலப்பம் பத்த மாட்டிக்குது.
ஒட்டகத்தார்: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா, ஒங்கள
நம்பின மக்களுக்கு வெலப்பம் இல்லன்னு பொசுக்குன்னு சொல்லிட்டிங்களேமா
யானையார்: சொல்லாம என்ன செய்யசொல்றீங்க. பரம்பர கட்சி,
பரம்பர கட்சினு எனக்கு பினுகு சுத்திட்டு இருந்தா வேறென்ன சொல்றது.
ஒட்டகத்தார்: இத தான் நாங்க ரெண்டு வருஷமா சொல்லிக்கிட்டு
இருக்கிறோம், இன்னும் சொல்லுவோம், வெளங்கும் கொஞ்சம் சொனங்கும்.
யானையார்: 26 வருஷமா நா என்ன பார்லிமென்ட் லேயா
இருந்தேன். சும்மா அத சொல்லி இத சொல்லி சாக்கு போக்கு காட்டி சுத்திக்கிட்டு
இருந்துட்டு இப்போ லைட்டா தலய காட்டுன ஒடனே பொறத்தால வந்துட்டு நம்ம மக்கள்.
ஒட்டகத்தார்: வெட்டுனா பச்ச ரெத்தம் தான் வருமாமே உண்மயா,
நம்ம அப்பா, உம்மம்மா ஒட்டு போட்ட கட்சிய உட்டு குடுக்க ஏலாதாமே.
யானையார்: அப்போ இருந்தது தொகுதி வாரி மொற, இப்போ இகிறது
விகிதாசார மொற.. இத வெளங்குனா மத்தது தானா வெளங்கும்
ஒட்டகத்தார்: அதுதானே இத பொதுநலமா யோசிக்கிற ஆள்வொலுக்கு
சொல்ல ஏழும். கேட்கார ஆள்வொலுக்கு சொல்லி எந்த பயனும் இல்ல.
யானையார்: இதுதான் முந்தி நடந்த சீன், அதனாலத்தான் நம்மோ
நெயினா மரிக்கார், எச்.எஸ். இஸ்மாயில் ஹாஜியாருவோ எல்லாம் பார்லிமென்ட் போனாங்க.
ஒட்டகத்தார்: இப்போ சீன் மாறி இருந்தும் ஒங்கட மேல நம்மோ
மக்கள் நம்பிக்கய ன்னம் கை உடலேயே.
யானையார்: இதுதான் முந்தி நடந்த சீன், அதனாலத்தான் நம்மோ
நெயினா மரிக்கார், எச்.எஸ். இஸ்மாயில் ஹாஜியாருவோ எல்லாம் பார்லிமென்ட் போனாங்க.
ஒட்டகத்தார்: இப்போ சீன் மாறி இருந்தும் ஒங்கட மேல நம்மோ
மக்கள் நம்பிக்கய ன்னம் கை உடலேயே.
யானையார்: அஹ்ஹா அஹ்ஹா, இது தான் எங்கட கெத்து. கால
காலமாக தோத்தாலும் எங்கட தந்ததுல மண் ஒட்டாதமாதிரி தான் நாங்க கதப்போம்.
ஒட்டகத்தார்: நல்லா சிரிச்சி மழுப்புறீங்க. உண்மய சொன்ன
கொறஞ்சா போயிருவீங்க, எங்க ஊருல உள்ள எல்லாரும் சேர்ந்து நிக்கச்சொல, ஒரு எம்பி
காக பாடுப்பட நீங்க தனிய மறுபக்கம் நிக்கிறிங்க இத எந்த கணக்குல சேக்குறது.
யானையார்: நாங்க அப்படித்தான், எங்களுக்கு எங்க கட்சிட
வெத்தி தான் முக்கியம், ஊர்ட வெத்தி எல்லாம் ரெண்டாவது தான்.
ஒட்டகத்தார்: 26 வருஷமா ஒங்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு
என்ன செஞ்சிங்க, மறுக்கா எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு ஓட்டு போடுங்கனு கேக்கறீங்க.
யானையார்: தோல்வித்தான் வெத்தியின் மொதபடியாம், வெண்டு
போவோம், இல்லாட்டி நெஸனல் லிஸ்ட்ல போவோம் என்ன வந்துற போவுது.
ஒட்டகத்தார்: சும்மா பச்சதன்னில வட பொரிக்காம மாறுங்க.
எத்துண வருஷமா நீங்க தோல்வி வெத்தியின் மொதப்படி னு சொல்லுவீங்க, அப்படி சொல்லி
சொல்லியே 26 வருஷத்த தாண்டி வந்தாச்சு. இப்போ நெஸனல் லிஸ்ட் பப்படமும் பொரிக்க
ஏலாதாமே.
யானையார்: சரி சரி.. நிப்பாட்டுவோம், நாயமா கதசிட்டு
போனா நமக்குள்ள சண்ட வந்துரும். இந்த எலக்சன் இண்டைக்கி வரும் நாளைக்கி வரும்.
நாமோ எப்போவுமே இங்கே தான் இகனும்.
ஒட்டகத்தார்: நீங்க சொல்றது உண்ம கத, ஐந்தறிவு உள்ள நாமோ
இப்படி யோசிக்கச்சொல ஆறறிவு உள்ள மனுசனுவோ சண்டபுடிச்சே காலத்த களிக்கிரானுவோ.
யானையார்: ஓமா, இப்போ நம்மோ அப்பா உம்மம்மா
இருந்திருந்தா கூட ஊருட நலன யோசிச்சி ஒத்துமைக்கு தான் ஒட்டு போடுவாங்க.
என்னத்தான் இருந்தாலும் ஊருக்கு பொரவ் தான் ஒலகம்.
ஒட்டகத்தார்: நீங்க சொல்றது உண்ம கத, ஐந்தறிவு உள்ள நாமோ
இப்படி யோசிக்கச்சொல ஆறறிவு உள்ள மனுசனுவோ சண்டபுடிச்சே காலத்த களிக்கிரானுவோ.
யானையார்: சுய புத்திய வச்சிட்டு யோசிச்சி முடிவெடுகாம
சும்மா நம்ம பரம்பர கட்சி கட்சின்னு மவுத்தா போனவங்க மேலேயே சாட்ட தூக்கி போடுறது
நல்லாவா இகிரு.
ஒட்டகத்தார்: இருவத்தாறு வருஷமா ஓட்ட வாங்கி நீங்க ஒன்னும்
செய்ய இல்லன்னு ஒத்து கொள்றீங்க தானே, இப்போ மாற்றத்த தேடி நாங்க ரெண்டு வருஷமா
செய்ற இந்த முயற்சிக்கு ஒருக்கா ஓட்ட தந்து பாருங்களே.
யானையார்: சரிடா பய, எனக்கு வெளங்குது ஒங்களுவொட
உற்சாகம், ஒழப்பு எல்லாம். நீ ஒண்ட முயற்சிய செஞ்சிகிட்ட இரி, புடிவாதம்
புடிக்கிரவங்கள உட்டு தள்ளு.
ஒட்டகத்தார்: இந்த முயற்சில நன்ம நடக்கும். சரி சரி நரய வேல
இகிரு, ன்னொரு நாளைக்கி சந்திப்போமே, நயமா யோசிக்க தேவயில்ல எல்லாம் நல்லதுக்கே.
_கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்_
0 Comments