பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.நல்லாட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்த புதிய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்யும் விவகாரத்தில் முன்னுரிமை கொள்கைகளை பின்பற்றக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலும் தாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் தற்போது தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற் கூடுதல் முன்னுரிமை அளிப்பது ஏன் எனத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்று அதனை முக்கியமானதாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் முக்கியமானது என்பதில் மற்றுக் கருத்துக் கிடையாது என்ற போதிலும் அதேயளவு பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்வதற்கும் அளிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments