Subscribe Us

header ads

மூளைக் கட்டியை அகற்றும் ஆபரேஷனின்போதும் தாளம் தப்பாமல் பாடிய வாலிபர்: வீடியோ இணைப்பு...



நாம் சுவாரஸ்யமாக தாளலயத்துடன் பாடிக் கொண்டிருக்கும் வேளையில் யாராவது குறுக்கே, பேசினாலோ, தப்புத்தாளம் போட்டாலோ ஏகத்துக்கு டென்ஷனாகி விடுவோம். 


ஏனெனில், சங்கீதம் என்பது வெறும் ஞானத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல, இதயம் மற்றும் மூளையின் உள்ளுணர்வுகளோடு ஒன்றிணைந்துவிட்ட ஒரு சங்கதி என்று நமது கோபத்துக்கு சில வேளைகளில் நாம் விளக்கமும் அளிப்பதுண்டு.

லண்டனில் உள்ள இம்ப்ரியல் கல்லூரி மாணவரான ரியூபென் ஹில்(22) என்பவரது மூளையில் வளர்ந்திருந்த கட்டியை லேசர் ஆபரேஷன் மூலம் அகற்ற நினைத்த லண்டன் சேரிங் கேர் மருத்துவமனை டாக்டர்கள், கல்லூரியில் உள்ள பாடல்குழுவில் (கோய்ர்) இடம்பெற்றுள்ள அவரிடம் ஆபரேஷனுக்கிடையில் ஒரு பாடலை பாடும்படி கூறினர்.

இந்த லேசர் ஆபரேஷனின்போது அந்த வாலிபரின் மூளையில் மொழியறிவு மற்றும் சங்கீத ஞானம் தொடர்பான தனித்திறன் எவ்வித பாதிப்பை உணர்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்காகவே டாக்டர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபரேஷனுக்கு இடையில் அவர் பாடிய பாடல் வரிகள் ராகத்தில் இருந்து விலகிச் சென்றாலும், தாளம் தப்பாமல் அவர் பாடியுள்ள அந்த காட்சி வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு, இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ராகபாவத்தில் இருந்து அவரது பாடல் சற்றே விலகியிருந்தபோதிலும், தாளபேதமில்லாமல் இருப்பதை நீங்களும் கேட்டு ரசிக்கலாமே..

Post a Comment

0 Comments