தற்போதிருக்கும் சூழ்நிலையில் யாரும் அமைச்சுப் பதவிகளை கேட்டுப்பெற முடியாது என தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு ஒத்தாசையாக இருப்பதே தேசிய அரசாங்கத்தைப் பலப்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்முறையின் போது முஸ்லிம்களுக்காக முன்நின்று தாக்குதலுக்குள்ளான அவர் இம்முறையும் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய அதேவேளை களுத்துறையில் போட்டியிட்ட பயங்கரவாதி ஞானசார ஐயாயிராம் வாக்குகளுக்கு மேல் பெற முடியாது தோல்வியுற்றிருந்தார்.
இவ்வருட ஆரம்பத்தில் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பாலித்த சில வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments