Subscribe Us

header ads

அமைச்சர்களின் அதிகரிப்பு குறித்து விவாதம் நடத்துங்கள்


அர­சி­ய­ல­மைப்பை மீறி அமைச்­சர்­களின் எண்­ ணிக்­கையை அதி­க­ரிப்­பது எவ்­வாறு என்­பது தொடர்பில் நாடும் மக்­களும் உண்­மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவே புதிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு நாள் விவா­தத்தை கோரி­யுள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்­தார்.
அமைச்சரவை விவகாரம் தொடர்பில் வினவியபோதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் முதலாம் திகதி கூட­வுள்­ளது. இதன் போது ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன கொள்கை உரை ஆற்­றுவார். அதன் பின்னர் புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை 2 ஆம் திகதி பதவி பிர­மாணம் செய்­வ­தற்கும் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.
ஆனால் ஜே.வி.பி. எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 3 ஆம் திகதி புதன்­கி­ழமை விஷேட விவாதம் ஒன்­றுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.இதனை பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தோடு எதிர்­வரும் 3 ஆம் திகதி விசேட விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.
இதனால் அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு 2 ஆம் திகதி இடம்­பெ­றாது. 4 ஆம் திகதி நடை­பெறும் திகதி நடை­பெறும் என அறிவிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக அவர் ரில்வின் சில்வா மேலும் தெரி­விக்­கையில்,
ஐக்கிய தேசிய முண்­ன­ணியும் -ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும் இணைந்து ஏற்­ப­டுத்­தப்­போகும் அர­சுக்கு தேசிய அர­சாங்கம் என கூற முடி­யாது. அது இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யே­யான கூட்­ட­ர­சாங்­க­மாகும்.
ஆனால் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறி அரசில் அமைச்சர் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இது தொடர்­பாக உண்­மையை நாடும் மக்­களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்­வி­ரண்டு கட்­சிகளும் இணைந்து ஆட்­சி­மைப்­பதோ அவர்­க­ளது தேசியப் பட்­டியல் தொடர்­பாகவோ எமக்கு பிரச்­சி­னை­யில்லை. ஆனால் அர­சி­ய­ல­மைப்பை மீறிய அமைச்சர் தொகை தொடர்­பி­லேயே பிரச்­சினை உள்­ளது..

எனவே பாராளுமன்றத்தில் இது தொடர்பாக எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட விவாதம் கோரியுள்ளோம். அதற்கு இணக்கம் தெரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments