Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 11


1786: கப்டன் பிரான்சிஸ் லைட், மலேஷியாவில் முதலாவது பிரித்தானிய கொலனியை ஆரம்பித்தார். 

1804: ஆஸ்திரியாவில் இரண்டாம் பிரான்சிஸ் மன்னரானார். 

1952: ஜோர்டான் மன்னராக பின் தலால் பதவியேற்றார். 

1960: சாட் நாடு சுதந்திரம் பெற்றது. 

1965: கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 

1968: பிரித்தானியாவின் நீராவி ரயில், தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது. 

1972: வியட்நாம் போர் - கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமைவிட்டுப் புறப்பட்டனர். 

1975: போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியைவிட்டுத் தப்பினார். 

1984: வானொலி ஒன்றுக்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்". 

1999: ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது. 

2003: ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபடும் படைகளின் தலைமைப் பொறுப்பை நேட்டோ ஏற்றது. 

2003: ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார். 

2006: யாழ். குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 

Post a Comment

0 Comments