இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் சற்றுமுன்னர் அவருடைய சொந்த இடமான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 3. 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேக்கரும்பு என்ற பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பல்லாயிரம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை 9.45 மணியளவில் இவரது உடல் வீட்டில் இருந்து பள்ளிவாசல் எடுத்து செல்லப்பட்டு அங்கு தொழுகை நடந்தது. பின்னர் ஊர்வலமாக உடல் பேக்கரும்பு என்ற பகுதிக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது.
இங்குள்ள பகுதியில் இவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கிட முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவரது இறுதிச்சடங்கில் சுமார் 3. 5 லட்சம் பேர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கலாம் இறுதிச்சடங்கு நடந்த மைதானத்திற்குள் முக்கியஸ்த்தர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டது. பொதுமக்கள் இறுதிச்சடங்கை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
இவரது உடலுக்கு பிரதமர் மோடி, காங்., துணை தலைவர் ராகுல் , மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையாநாயுடு , மனோகர் பாரிக்கர் , மேகலாயா கவர்னர் சண்முகநாதன், மாநில முதல்வர்கள் சித்தராமையா ( கர்நாடகா), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) , உம்மன்சாண்டி (கேரளா), கேரள கவர்னர் சதாசிவம், கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், குலாம் நபி ஆசாத், எடியூரப்பா, குமாரசாமி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் , பொதுமக்கள் என பலரும் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
0 Comments