Subscribe Us

header ads

அற்­புத விளக்கையே விஞ்சியவர் மஹிந்த

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் வெற்­றியை தடுக்கும் வகையில் ஐக்­கிய தேசியக்கட்­சியின் தேர்தல் பிர­சார நடவ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவற்றை தேர்­தல்கள் ஆணை­யாளர் கவ­னத்­தில்­கொள்­ள­வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன் னணி­யினர் தெரி­வித்­தனர்.
அலா­வு­தீனின் அற்­புத விளக்கால் செய்­ய­மு­டி­யா­ததை மஹிந்த செய்­து­காட்­டினார். எனவே புதிய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் வாக்­கு­று­தி­க­ளையும் செய்­து­காட்­டுவார் எனவும் கூட்­ட­ணி­யினர் குறிப்­பிட்டனர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ளை­யத்தில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

இதில் கருத்து தெரி­வித்த கட்­சியின் உறுப்­பினர் டிலான் பெரேரா கூறு­கையில்,
இந்த நாட்டில் முப்­பது ஆண்­டு­கா­ல­மாக நில­விய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர முடியும் என நான் ஒரு­போதும் நினைத்­த­தில்லை. விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத போராட்டம் மிகவும் பல­மா­ன­தா­கவே இருந்­தது. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் ஆயுதப் போராட்­டத்தை அர­சாங்கம் முடி­வுக்கு கொண்­டு­வ­ராது என்று நான் திட­மான நிலைப்­பாட்டில் இருந்தேன். ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆட்­சியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் புலி­களை முழு­மை­யாக இலங்­கையில் அழிக்க முடிந்­தது. பிரி­வி­னையின் உச்­சத்தில் இருந்த விடு­தலைப் புலி­களை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்தி நாட்டை விடு­விக்க முடிந்­தது. புலி­களின் ஆயுதப் போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்­னரே மஹிந்த எப்­ப­டிப்­பட்ட தலைவர் என்­பதை நான் தெரிந்­து­கொண்டேன்.
அதேபோல் நாட்டில் பல­மான அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது கடி­ன­மான செய­லென எண்­ணி­ய­போது கடந்த பத்து ஆண்­டு­களில் நாட்டில் அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. விவ­சா­யி­க­ளுக்­கான உர மானி­யங்­களை வழங்க முடி­யாது என நினைத்த வேளையில் அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களை வழங்க முடிந்­தது. நாட்டில் கல்வி மற்றும் சுகா­தார நட­வ­டிக்­கை­களை சிறப்­பாக செய்ய முடி­யு­மா? அவர்கள் எதிர்­பார்க்கும் நிவா­ர­ணங்­களை முன்­னெ­டுக்க முடி­யுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவை அனைத்­தையும் மஹிந்­தவால் முன்­னெ­டுக்க முடிந்­தது.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் ஆட்­சி­கா­லத்தில் எந்­த­வித அபி­வி­ருத்­தி­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது என ஐக்­கிய தேசியக் கட்சி விமர்­சித்­தது. அலா­வு­தீனின் அற்­புத விளக்கை வைத்தா இவற்றை செய்ய முடியும் என ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் விமர்­சித்­தனர். ஆனால் அலா­வு­தீனின் அற்­புத விளக்கால் செய்ய முடி­யா­ததை மஹிந்த ராஜபக் ஷ செய்து காட்­டி­யுள்ளார். ஆகவே இப்­போது நாம் முன்­வைத்­தி­ருக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் வாக்­கு­று­தி­க­ளையும் முழு­மை­யாக மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியால் செய்து கட்­டுவோம்.
டலஸ் அழ­கப்­பெ­ரும
இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­விக்­கையில்,
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிரச்­சார நட­வடிக்­கைகளை தடுக்கும் வகை­யிலும், எமது உறுப்­பி­னர்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லான வகை­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­பா­டு­களை தேர்­தல்கள் ஆணை­யாளர் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும்.
அதேபோல் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவை இலக்­கு­வைத்து முன்­னெ­டுக்கும் அவ­தூறு செயற்­பா­டுகள் தொடர்­பிலும் நாம் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ரிடம் முறை­யி­ட­வுள்ளோம். எமது ஆட்­சியில் ஊடக அடக்­கு­மு­றை­க­ளையும் அடா­வ­டித்­த­னத்­தையும் முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­தனர். ஆனால் இன்று ஊடக சுதந்­திரம் எந்­த­அ­ளவில் செயற்­ப­டு­கின்­றது என்­பதை அனை­வரும் சிந்­தித்­துப்­பார்க்க வேண்டும். இன்று அனைத்து ஊட­கங்­க­ளி­னதும் பிர­தா­னி­களை ரணில் விலைக்கு வாங்­கி­விட்டார்.

அவர்­களை தனது கைக்குள் வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அதி­கா­ரத்தை தக்­க­வைக்கப் பாக்­கின்­றனர். ஆகவே இவை தொடர்பில் மக்கள் தெளி­வு­பெற வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.
சுசில் பிரே­ம­ஜெ­யந்த
செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் தனது இரட்டை சதத்தினை பூர்த்தி செய்துள்ளது.தமது இருநூறு நாட்களை கடந்துள்ளனர். ஆனால் இந்த இருநூறு நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு ஆட்சி செய்துள்ளனர் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள். வெறும் பொய்களால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகவே மக்கள் தமது தீர்மானங்களை மிகத்தெளிவாக எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments