போர்க்குற்றர்சாட்டைப் பற்றி விசாரணை செய்யிறதுக்கு தேசிய பொறிமுறையை செப்டம்பர் மாதத்திற்குள்ள நிறுவுறது சரியான இலேசான காரியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில சொல்லியிருக்கிறார்.
முதலில செப்டம்பர் மாதம் வரை ஐ.நாவின்ட அறிக்கையை நிப்பாட்டச் சொன்னவையள்.. இப்ப செப்டம்பருக்குள்ள பொறிமுறையை நிறுவினமாம்... அதுசரி பேக்காட்டு விசாரணையை முன்னெடுக்க எப்ப பொறிமுறையை நிறுவி என்ன? நிறுவாம என்ன?
சர்வதேச விசாரணையையும் பேக்காட்டு விசாரணை ஆக்க இலங்கை அரசு கடுமையாய் உழைக்குது பாருங்கோ. ஒரு பக்கம் எல்லாப் புலம்பெயர்ந்தவரும் பயங்கரவாதி இல்லை எண்டுறார் மங்கள.. இஞ்சால புலம்பெயர்ந்தவையள் நாட்டுக்கு வந்தால் அச்சுறுத்தல் எண்டுறார் நிமால்சிறிபால் டி சில்வா.
மங்கள புலம்பெயர்ந்தவையளில பயங்கரவாதியளும் இருக்கினம் எண்டுறார். நிமால் புலம்பெயர்ந்தவையள் எல்லாரும் பயங்கரவாதியள் எண்டுறார். இஞ்ச இன்னும் ஊடகவியலாளருக்கு பாதுகாப்பில்லை.. போருக்கு அஞ்சி உயிரை பாதுகாக்க போனவையள் பயங்கரவாதியள்.. பிறகென்ன வடக்கில உள்ள சனங்களையும் பயங்கரவாதியள் எண்டுதானே அழிச்சவை.
இஞ்ச சனங்களின்ட நிலங்கள் நிறைய திருப்பிக் குடுக்கேல்ல. எல்லாத்துக்கும் அடிப்படையான ஒரு தீர்வை இன்னும் முன்வைக்கேல்ல.. எந்த அடிப்படையில புலம்பெயர்ந்தவையள கூப்பிடுறினம்...
புலம்பெயர்ந்தவையள்ல கொஞ்சப்பேர் பயங்கரவாதியள் எண்டுறது எல்லாரையும் பயங்கரவாதியள் எண்டுறதுக்கு் சமம் புலம்பெயர்ந்தவையளளை பயங்கரவாதியள் எண்டுறதும் இஞ்சயுள்ள பிரச்சினையளை தீர்க்காம இருக்கிறதும் ஒண்டுதான்..
ராஜபக்சவின்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்த மங்கள சமரவீர இண்டைக்கு அந்த ராஜபக்சவையும் காப்பாற்றிர வேலையள செய்யிறார். அவருக்கு தெரியும் ராஜபக்சவாய் இருந்தால் என்ன சந்திரிக்காவாய் இருந்தால் என்ன வேற எவராய் இருந்தால் என்ன இவையள காப்பாற்ற வேணும் எண்டுறது அவையின்ட அரசியல்..
சர்வதேச நெருக்கடியள தவிர்க்கதான் புலம்பெயர் தமிழர்களில போலி அக்கறை காட்டுறார் மங்கள. அவர் சந்திச்ச ஆக்கள் நிலத்திலையும் புலத்திலையும் ஒரே மாதிரி ஆட்கள். தமிழர்களுக்கு எதிராய் நடந்த இனப்படுகொலையை மறைக்க மங்கள கடுமையாய் வேலை செய்யிறார். தமிழரை பேக்காட்டுற வித்தை.
மங்கள சமரவீரை நேர்மையாய் பேசுறதாய் இருந்தால் வேற மாதிரி பேசத் தொடங்க வேணும். அதுதான் புதிய தொரு அணுகுமுறை. புதியதொரு பயணம்.. இது அப்பிடி இல்லை... மகிந்த மோதகம் தந்தார். இவையள் கொளுக்கட்டை தாறினம்.
0 Comments