விளம்­ப­ரங்­களில் நடித்து பணம் சம்பா­தித்து வரும் கிரிக்கெட் வீரர் சச்­சி­னுக்கு வழங்­கப்­பட்ட, பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்­டு­மென இந்­திய, மத்­திய பிர­தேச உயர்­நீ­தி­மன்­றத்தில் பொது­நல வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.
இது தொடர்­பாக போபால் நகரை சேர்ந்த வி.கே. நாஷ்வா என்­பவர் மத்­திய பிர­தேச உயர்­நீ­தி­மன்­றத்தில் அளித்­துள்ள மனுவில், '' பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் விளம்­ப­ரங்­களில் நடித்து பணம் சம்­பா­தித்து வரு­கிறார்.
பாரத ரத்னா விரு­துக்­குள்ள நற்­பெயர் அவர் நடிக்கும் விளம்­ப­ரங்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எனவே அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாரத ரத்னா விரு­தினை மத்­திய அரசு திரும்ப பெற நீதி­மன்றம் உத்­த­ர­விட வேண்­டு­மென கோரி­யுள்ளார்.