Subscribe Us

header ads

புத்தளம் மற்றும் பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்


பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் புத்தளம் – சின்னப்பாடு பகுதியில் வீடொன்று சேதமடைந்துள்ளது.

நேற்று முதல் பெய்து வரும் மழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இதேவேளை தொடரும் மழை காரணமாக மன்னார் புத்தளம் பிரதான வீதியூடான போக்குவரத்து எழுவான்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments