முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க, பிரித்தானியாவில் கார் ஒன்றுக்குள் சிக்கியிருந்த பாம்பு ஒன்றை அதற்கு எந்த காயமும் ஏற்படாமல் பிடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
மலைப் பாம்பொன்று கார் ஒன்றிக்குள் புகுந்து டேஸ் போர்ட் பகுதியில் நுழைந்து கொண்டது.
இதனையடுத்து கார் உரிமையாளர் விமுக்தி குமாரதுங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பாம்புக்கோ அங்கிருந்தவர்களுக்கோ எந்த சேதமும் ஏற்படாத வகையில் விமுக்தி பாம்பை மீட்டெடுத்துள்ளார்.
5 அடி நீளமான இந்த மலைப்பாம்மை காரின் உரிமையாளர் தனது வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
விமுக்தி குமாரதுங்க, 2005 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கைலைக்கழகத்தில் கால்நடை மருத்துவப் பிரிவில் கல்வி கற்றார். விமுக்தி கால்நடை மருத்துவத்தில் நிபுணர் எனக் கூறப்படுகிறது.
உயர்கல்வியின் பின்னர், விமுக்தி 2011 ஆம் ஆண்டு ஹைக்ரோப்ட் என்ற நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக இணைந்து கொண்டதுடன் தொடர்ந்தும் அதில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments