விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியயூதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுடன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் வடபுல மக்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் அத்தியாவசியமான தேவைகள் குறித்தும்,
இதுவரையில் விடுவிக்கப்படாத நிலையிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியேற்ற காணிகளின் விடுவிப்பு குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபுல மக்கள் மீள்குடியேறுவதற்கு தயாராகவுள்ளனர் எனவும், அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் தாமதமடைந்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத்தினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்வினை பெற்று கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

0 Comments