Subscribe Us

header ads

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம்


இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 

ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments