Subscribe Us

அரசியல் தலையீடுகள் காரணமாக நாடு அழிவடைந்துள்ளது: சோபித தேரர்



நாடு அழிவடைவதற்கு முதல் காரணம் அனைத்து விடயங்களிலும் அரசியல் தலையீடுகளே என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பொது நிர்வாகங்களுக்கு பொருத்தமற்றவர்களை நியமித்தமையே பொது நிர்வாகம் சீரழிந்தமைக்கு காரணம்.

இதேவேளை பொலிஸாரும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் மக்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டதனால் தான் நாட்டில் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அவ்வாறான மாற்றங்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை எனவும் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments