கடுகண்ணாவ பொலிஸ் பிரிவில் பிலிமத்தலாவ மக்கள் வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற தனியார் நிறுவன கணக்காளராகப் பணியாற்றும் பெண்ணொருவரிடம் விளையாட்டுத் துப்பாக்கியையும் கத்தியையும் காட்டி அச்சுறுத்தி சுமார் 12 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று பகல் வேளையில் பதிவாகியுள்ளதாகவும் 11 இலட்சத்து 68 ஆயிரத்து 900 ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பிளஸ்டிக் விளையாட்டு துப்பாக்கி ஒன்றினை அப்பிரதேசத்தில் விழுந்து கிடந்த நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் மீட்டுள்ளதகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நேற்று பகல் வேளையில் பிலிமதலாவ மக்கள் வங்கியில் வைப்பிலிடவென ஹேனாவல பிரதேச தனியர் நிறுவனம் ஒன்றின் கணக்காளராக கடமையாற்றும் பெண்ணொருவர் 11 இலட்சத்து 68 ஆயிரத்து 900 ரூபாவுடன் அங்கு சென்றுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்ரில் வந்த இருவர் கைத்துப்பாக்கி ஒன்றினையும் கத்தி ஒன்றினையும் காட்டி அப் பெண்ணை அச்சுறுத்தி அப்பணத்தொகையினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிமதலாவ மக்கள் வங்கி அருகே இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குரித்து உடன் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட5தாக கூரப்படும் பிளஸ்டிக் விளையாட்டு கைதுப்பாக்கி ஒன்றினை அப்பிரதேசத்தில் இருந்து மீட்டுள்ளனர். இந் நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் கொள்ளையர்களைத் தேடி மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.
0 Comments