பாகிஸ்தானில் 12 தூக்கு தண்டனை கைதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் பாக். அதிபரால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை கராச்சி உட்பட ஆறு பாகிஸ்தான் நகரங்களின் சிறைகளில் இருந்த 12 தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் முல்தான் மத்திய சிறையில் இருந்த தூக்கு தண்டனை கைதி நசிரின் தண்டனை நிறைவேற்றம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு குற்றவாளி தரப்புக்கும், எதிர்தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
கராச்சியில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது தீவிராவதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து பாகிஸ்தான் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.
0 Comments