Subscribe Us

header ads

"100 நாட்களுக்கு மட்டுமே இந்த அரசாங்கம் இருக்கும்''


ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை ஆத­ரிக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே தேசிய அர­சாங்­கத்­தினை ஆத­ரிக்­கின்றோம். நாம் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் எமது கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்குக் கட்­டுப்­ப­டு­வ­த­னா­லுமே ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கி­யுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரிவித்தார்.

நூறு நாட்கள் மட்­டுமே இந்த அர­சாங்கம் இருக்­கு­மென நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைமையகத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு­ கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மைத்­துவம் மாற்­ற­ம­டைந்­துள்­ளதே தவிர கட்­சியில் எவ்­வித மாற்­றமும் இடம்­பெ­ற­வில்லை. அதேபோல் உண்­மை­யான அர­சாங்கம் எது­வென்­பதில் மக்கள் குழப்­பத்தில் உள்­ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஜக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட்டு ஜனா­தி­ப­தி­யா­க­வுள்ளார். தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஆவார். அதேபோல் பாரா­ளு­மன்றில் பெரும்­பான்மை எம்­மிடம் உள்ள போதும் ஜக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கி­யுள்ளார். இவ்­வா­றா­ன­தொரு குழப்­பத்தில் தேசிய அர­சாங்கம் நகர்­கின்­றது. எனினும் நாம் விட்­டுக்­கொ­டுப்­பு­டனும் எமது கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­ப­டு­வ­த­னா­லுமே ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கி­யுள்ளார். பாரா­ளு­மன்றின் பெரும்­பான்மை எமக்கு உள்ள போதிலும் 49 ஆச­னங்­க­ளுடன் உள்ள ஐக்­கிய தேசிய கட்­சிக்கே பிர­தமர் மற்றும் அமைச்­சுப்­ப­த­விகள் கிடைத்துள்ளன.
எனவே எமது விட்­டுக்­கொ­டுப்பு மற்றும் எமது கட்­சியின் கட்­ட­ளை­யினை மதிப்­பதன் கார­ணத்­தி­னா­லுமே ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­ய­மைத்­துள்­ளது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. இம்­மு­றைமை அடுத்த பொதுத்­தேர்­தலில் மாற்­ற­ம­டையும். இம்­முறை இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தலை­மைத்­துவ மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தி நல்­லாட்­சி­யினை உரு­வாக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே தேசிய அர­சாங்கம் உரு­வா­கி­யுள்­ளது. இதன் போது தேசிய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை ஆத­ரிக்­கு­மாறு ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்­ட­தற்­க­மைய நாம் இவர்­களின் 100 நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை ஆத­ரித்­துள்ளோம். இன்று 50 நாட்கள் முடி­வ­டைந்­துள்­ளன. எஞ்­சி­யுள்ள 50 நாட்கள் வரை­யில்தான் இவர்­க­ளுடன் எமது உறவு இருக்­கப்­போ­கின்­றது. எனவே இது­வ­ரையில் இவர்கள் செய்­தது என்ன ?எஞ்­சி­யுள்ள நாட்­களில் இவர்கள் செய்­யப்­போ­வது என்­ன­வென்­பது தொடர்பில் நாம் பா ர்த்துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.
ஜக்­கிய தேசிய கட்­சியின் இவ் ஆட்சி வெறும் நூறு நாட்கள் மட்­டுமே என்­பதை இவர்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும். அதன் பின்னர் எப்­ப­டியும் பொதுத்­தேர்­த­லுக்கு சென்­றாக வேண்டும். எனவே அடுத்து வர­வி­ருக்கும் பொதுத்­தேர்­தலின் போது ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்­தா­லோ­சித்து வரு­கின்றோம். அதே­வேளை அடுத்த பொதுத்­தேர்தல் நடத்­தப்­ப­டு­மாயின் அர­சியல் அமைப்பு மாற்­றத்­து­ட­னேயே இடம்­பெற வேண்டும். வெறு­மனே 18 வது திருத்­தத்­தினை இல்­லா­தொ­ழித்து 19ஆவது திருத்­தத்­தினை கொண்டு வரு­வதால் மட்டும் பலனில்லை. தேர்தல் முறை­யிலும் மாற்­றத்­தினை கொண்டு வர வேண்டும். ஜனா­தி­பதி ஓர் கட்சியிலும் பிரதமர் அதே கட்சியிலும் இருக்கும் வரையில் அரசாங்கம் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். ஆனால் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் பிரதமர் வேறு கட்சியாகவும் இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் ஏற்படும். 2001 ம் ஆண்டும் இந்நிலைமை ஏற்பட்டது. எனவே இதனை தடுக்க வேண்டுமாயின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments