Subscribe Us

header ads

புதிய BMW ஆடம்பர காரை அறிமுகம் செய்த சச்சின் (சுமார் 4.8 கோடி இலங்கை ரூபா)


இந்­திய கிரிக்கெட் நட்­சத்­தி­ர­மான சச்சின் டெண்­டுல்கர், புதிய  2015 BMW i8 ரக
ஆடம்­பர காரை மும்­பையில் நேற்று அறி­முகம் செய்­து­வைத்தார். 

இந்­தி­யாவில் இந்த றைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் விலை 2.29 கோடி ரூபா (சுமார் 4.8 கோடி இலங்கை ரூபா)  ஆகும்.  

சச்சின் டெண்­டுல்கர் பி.எம்.டபிள்யூ கார் அபி­மா­னி­யாவார். 1989 ஆம் ஆண்டு இந்­திய அணியில் விளை­யாட ஆரம்­பித்த அவர் 1993 ஆம் ஆண்டு தனது முத­லா­வது பி.எம்.டபிள்யூ காரை வாங்­கி­யி­ருந்தார். 

அது ஏற்­கெ­னவே பயன்படுத்தப்பட்ட ஒரு செகன்ட் ஹேன்ட் காராகும். ஆனால், அன்­றைய நிலையில் அதைத்தான் அவரால் வாங்க முடிந்­தது.  

ஆனால் பின்னர் உலகின் மிகச்­சி­றந்த கிரிக்கெட் வீரர்­களில் ஒரு­வ­ராக அவர்
விளங்­கி­ய­போது உலகின் எந்த காரை வேண்­டு­மா­னாலும் வாங்கும் ஆற்றல் கொண்­ட­வ­ராக டெண்­டுல்கர் மாறினார். 

இது குறித்து சச்சின் டெண்­டு­கல்கர் அளித்த செவ்­வி­யொன்றில், "நான் எப் ­போ­துமே பி.எம்.டபிள்யூ ரசி­க­னாக இருந்தேன். எனக்கு 14 வய­தா­ன­போது இக்­கார்­களின் மீது ஆர்வம் ஏற்­பட ஆரம்­பித்­தது. 1993 ஆம் ஆண்டு செகன்ட் ஹேன்ட் பி.எம்.டபிள்யூ ஒன்றை முதல் தட­வை­யாக நான் செலுத்­தினேன்" என அவர் கூறினார்.  

பின்னர் சச்சின் டெண்­டுல்­கரை தனது வர்த்­த­க­நாம தூதுவராக பி.எம்.டபிள்யூ நிறு வனம் நியமித்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments