Subscribe Us

பாராளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் நேரடியாக ஒளிபரப்ப திட்டம்


பாராளுமன்ற ஒன்று கூடலை மீண்டும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அரச தகவல் ஊடக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 20ம் திகதி டெலிகொம் பியோடிவி வலையமைப்பில் 92வது அலைவரிசையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடலாம்.
இதற்கு முன்னரும் இந்த தொழிநுட்பம் காணப்பட்டது. எனினும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை சபாநாயகரினால் கைவிடப்பட்டது.

பாராளுமன்ற வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள பிரமாண்ட திரை மூலம் பாராளுமன்ற நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக பார்வையிடலாம்.

Post a Comment

0 Comments