சம்மாந்துறை ஊரில் 45 000 வாக்காளர்கள் அளவில் உள்ளனர்.இதில் 7000 தமிழ் மக்கள் வாக்குகளும் 38 000 முஸ்லிம் மக்கள் வாக்குகளும் உள்ளன.பொதுவாக பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் வாக்களிப்பு வீதம் பொதுவாக 60-65 வீதப்படி இரிக்கும்.அப்படிப் பார்த்தால் 22800-24700 சரி நாம் 70 வீதமான வாக்குகள் அளிக்கப்படும் என எடுப்போம் இதன் படி 26600 வாக்குகள் தான் அளிக்கப்படப்போகிறது.இதை மிஞ்சிய வாக்களிப்பு வீதம் சாத்தியம் அற்றது.
மு.கா இற்கென சம்மாந்துறையில் நிச்சயிக்கப்பட்ட வாக்குகள் 3000 உள்ளன.சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நௌசாத் இற்கென்று நிச்சயிக்கப்பட்ட வாக்குகள் 5000 உள்ளன ஐ.தே.க இற்கென்று நிச்சயிக்கப்பட்ட 2000 உள்ளன.ஜே.வி.பி சுயேட்சை,செல்லுபடியற்ற வாக்குகள்(பொதுவாக 5 சதவீத வாக்குகள் செல்லுபடியற்றதாக காணப்படும்) என்று ஒரு இரண்டாயிரம் வாக்குகள் இழக்கப்பட வாய்ப்புள்ளது.எனவே,இவ் 12 000 வாக்குகளினையும் கழித்தால்,60-65 வீதத்தின் அடிப்படையில் மிதப்பு வாக்குகளாக 1௦ 800-12 700 வாக்குகளும் ,70 வீதத்தின் அடிப்படையில் மிதப்பு வாக்குகளாக 14 600 வாக்குகளும் காணப்படப் போகிறது.
மு.கா,அ.இ.ம.கா தேசியக் கட்சிகளுடன் இணைந்து கேட்டால் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெறும் கட்சி போனஸ் ஆசனம் உள்ளடங்கலாக 4 ஆசனங்களையும்,ஏனைய பெரிய தேசியக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றவே அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன(கடந்த பாராளுமன்றத் தேர்தல் போன்று).ஏனைய ஒரு ஆசனத்திற்கே சுயேட்சைக் குழு போட்டி இட வேண்டி இட வரும்.இதன் படி பார்க்கும் போது சுயேட்சை குழுவிற்கு ஒரு பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே சவாலாக அமையப் போகிறது(சில வேளை இரண்டாம் நிலையில் உள்ள தேசியக் கட்சியும் போட்டிக்கு வரலாம்).சென்ற முறை த.தே.கூ 26895 வாக்குகளினைப் பெற்றிருந்தது. 70 சதவீதம் சம்மாந்துறையில் வாக்களிக்கப்பட்டால் கூட 26600 வாக்குகள் தான் சம்மாந்துறையில் அளிக்கப்படப் போகுறது.70 வீதம் வாக்களிப்பும் சம்மாந்துறையில் அளிக்கப்படும் வாக்குகள் முற்றாகவும் சுயேட்சை குழுவிற்கு அளிக்கப்பட்டாலும் யார் தலைமையிலான சுயேட்சை குழுவினாலும் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியாது.முற்றாக சம்மாந்துறை வாக்குகள் சுயேட்சைக்கு அளிக்கப்பட மாட்டாது அவ்வாறே வாய்ப்பு இல்லை என்றால்.சுயேட்சை முறை பிரதிநிதித்துவக் காப்பிற்கு சாத்தியமானதா?
இம்முறை மு.கா,அ,இ.ம.கா போன்றவை தனித்து கேட்கும் போது சிறு எண்ணிக்கையான வாக்குகள் கட்சிகளினுள் சிறைப்படுத்தப்படும் என்பதனால் இன்னு மொரு ஆசனம் பெரும் கட்சிகளிடம் இருந்து சிதற வாய்ப்புள்ளது.மு.கா,சு.க,ஐ .தே.க ஆகிய கட்சிகளுனுள் அதிக போட்டி நிலவும்.இதன் போது மாவட்டத்தினை வெற்றி கொள்ளும் கட்சி போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக 3 ஆசனங்களினையும்,ஏனைய இரு கட்சிகளும் நிச்சயப்படுத்தி தலா 1 ஆசனத்தினையும் பெற்றுக் கொள்ளும்.ஏனைய இரு கட்சிகளில் கூடிய வாக்கினைப் பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையினை 65 000 என கணக்கிடுவோம்(இதனை விட அதிகமான வாக்குகளே இரண்டாம் நிலையில் உள்ள கட்சி பெற வாய்ப்புள்ளது).ஒரு ஆசனத்திற்கு மதிப்பிடப்பட்ட வாக்குகள் 40 000 எனக் கொள்வோம்.எஞ்சப் போகும் வாக்குகள் 25 000 (65 000-40000).எனவே,ஏனைய இரு ஆசனங்களில் போட்டிக்கு போட குறைந்து.25 000 வாக்குகளாவது தேவைப்படும்.இத் தொகை வாக்குகள் எல்லாம் எமக்கு எட்டாக்கனியே.
சம்மாந்துறை வாக்குகள் முற்றாக சுயேட்சை பக்கம் சாயும் எனக் கணக்கிட்டாலே சுயேட்சை முறைமை சாத்தியம் அற்றது என்ற பதிலைப் பெறுகிறோம் என்றால் சம்மாந்துறை வாக்குகள் முற்றாக சுயேட்சை பக்கம் திரும்புமா? என்ற வினாவினை எழுப்பி சிந்தித்தால்..?? இங்கே மிதப்பு வாக்குகளினை கணக்குக் காட்டியது எமது வெற்றி வியூகங்கள் மிதப்பு வாக்குகளினையே அடிப்படையாக வைத்து இருப்பது பொருத்தமானது என்பதற்காகும்.சம்மாந்துறை வாக்குகள் ஒரு பக்கம் சாய்ந்தாலே சுயேட்சை மூலம் சாத்தியம் அற்றது எனும் போது மிதப்பு வாக்குகளினை அடிப்படையாக கொண்டு சிந்தித்தால்..??
சம்மாந்துறை மக்கள் கடந்த முறை மு.கா,தே.கா,ஐ.தே.க போன்ற கட்சிகளினைப் புறக்கணித்து தற்போதைய சம்மாந்துறை தவிசாளர் நௌசாத் பக்கம் சாய்ந்தார்கள்.பேரியல் அஸ்ரபுடன் இணைந்தே நௌசாத் sir 22208 வாக்குகளைத் தான் பெற்றுக்கொண்டார்.இதனை விடவா சம்மாந்துறை சார்பாக சுயேட்சையில் களமிறங்குபவர் பெற்றுக் கொள்ளப் போகிறார்.இந்த வாக்குகளை அப்படியே சுயேட்சையில் குவித்திருந்தால் ஆசனத்தினை வென்றிருக்க முடியுமா? இதை விடவா மக்களினை ஒன்றிணைக்க முடியும்..??
எவ்வாறு எமது சிந்தனைகளினை மாசற அமைத்தாலும் சுயேட்சை முறைமை மூலம் எமது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியாது என்பதனையே பதிலாகப் பெறலாம்.எனவே,தயவு செய்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை அமைத்து எமது பிரதிநிதித்துவத்தினை இம் முறையாவது உறுதிப்படுத்த முயற்சிப்போமாக.
இம் முறைமை சாத்தியமற்றது என்பது ஒரு புறம் இருந்தாலும் இது பாரிய எதிர் விளைவுகளை எமது சமூகத்திற்கு ஏற்படுத்தக் கூடியது.எனது அடுத்த ஆக்கம் இதற்கான பதில்களினைத் தரும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.
0 Comments