Subscribe Us

header ads

மகிந்த ஆட்சியில் பொது­பல சேனாவுக்கு இடம் வழங்கப்ட்டது. ஆனால், புதிய அரசில் எமது அமைப்பு புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.




நல்­லி­ணக்கம் பற்றி பேசும் தமிழ் அர­சியல் தரப்பு வட மாகாண சபையில் இன­வாத பிரே­ர­ணை­யினை நிறை­வேற்­றி­யி­ருப்­பது நாட்­டிற்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லென தெரி­விக்கும் பொது­பல சேனா.

சம்­பந்­தனை பின் தள்­ளி­விட்டு வட மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக்­கவே புலம்­பெயர் சர்­வ­தேச அமைப்­புக்கள் முயற்­சிப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தி­யது.

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­டதாவது;

வட மாகாண சபையின் செயற்­பா­டுகள் அண்மைக் காலங்­களில் மிகவும்
மோச­மா­ன­தா­க­வுள்­ளன. இன­வாத பிரி­வி­னைக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் வட மாகாண சபையும் முயற்­சிக்­கின்­றது என்­பது அண்­மையில் வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் மூலம் தெரி­வந்துள்­ளது.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியில் வட மாகா­ணத்தை சரி­யாக கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்தார்.

யுத்­தத்தை வென்­ற­வுடன் வடக்­கிற்கு உரிய பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்­தது. ஆனால் தற்­போது நிலைமை மாறி­விட்­டது. பழைய சூழ்­நிலை உரு­வா­கின்­றது

ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துடன் நாட்டின் நிலை­மைகள் மீண்டும் பின்­நோக்கி நகர்­கின்­றன. 2002ஆம் ஆண்டில் நாடு எவ்­வா­றா­ன­தொரு அர­சியல் சூழ்­நி­லையில் இருந்­ததோ அவ்­வா­றா­ன­தொரு நிலைமை தற்­போது மீண்டும் உருவாகி வரு­கின்­றது.

அன்று மகிந்த ராஜபக்ஷ ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் பூனைகள் போல் பதுங்கி கொண்ட வட மாகாண சபை இன்று மீண்டும் புலி­க­ளாக மாற ஆரம்­பித்து விட்­டது.

வட­மா­காண சபையில் தற்­போது கொண்டு வரப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது இலங்­கைக்கு மிகவும் அச்­சு­றுத்­த­லான ஒன்­றாகும். இவ்­வி­ட­யத்­தினை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொண்டால் நாடு பாதா­ளத்தின் பக்­கமே கொண்டு செல்லப்­படும்.

விக்கி பக்கம் சர்­வ­தேசம்

வட மாகாண சபையின் இனப்­ப­டு­கொலை தொடர்பில் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டமை சர்­வ­தே­சத்­தினை மகிழ்­விக்­கவேயாகும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் அமைதி காக்­கின்ற நிலையில் கூட்­ட­மைப்பின் தலை­மையில் இருந்து சம்­பந்­தனை ஓரங்­கட்­டி­விட்டு சி.வி.விக்­னேஸ்­வ­ரனை கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக்கும் முயற்­சிகள் சர்­வ­தேச மற்றும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இன்னும் சிறிது காலத்தில் இது நடந்தே தீரும்.

எமக்கு எதி­ராக அடக்­கு­முறை

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியில் பொது­பல சேனா அமைப்­பிற்கு இடம் வழங்­கப்­பட்­டது. எமது கருத்­துக்­களை முன்­வைக்­கவும்
அநி­யா­யங்­களை தட்­டிக்­கேட்­கவும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது.

ஆனால், புதிய அரசில் பெளத்­தமும் எமது அமைப்பும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நாம் பௌத்த அமைப்பாக செயற்படுவது தவறெனில் வட மாகாண சபையின் செயற்பாடுகளை என்னவென்று கூறுவது?

குற்றம் சுமத்தி எம்மை புறக்கணித்து விட்டு பிரிவினையினை தூண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வட மாகாண சபைக்குமே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments