உலகையே உலுக்கிய ஹிட்லர் மிகச் சிறந்த ஓவியர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பிறந்த ஹிட்லரின் கனவாக இருந்தது கட்டட வரை கலைஞராக உருவாக வேண்டுமென்பதே ஆகும்.
1907 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஒஸ்ரியாவிலுள்ள Art Academy இல் இணைய வேண்டும் என்பதனையே இலக்காக கொண்டிருந்தார். எனினும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதிக தன்னம்பிக்கையுடைய ஹிட்லரினால் இதனைத தாங்க முடியவில்லை. யூத இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரினாலேயே தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என ஹிட்லர் ஊகித்துக் கொண்டார்.
எனினும் மனித உருவங்களை வரைவதில் ஹிட்லரின் திறமை போதுமானதாக இல்லை என்பதனை காரணம் காட்டியே அந்த பேராசிரியர் இவரது விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார். எனினும் கட்டட நிரமாணங்களை வரைவதில் ஹிட்லர் அதி திறமை உடையவராக விளங்கினார்.
பின்னராக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கவே ஜேர்மனை சென்றடைந்த ஹிட்லர் அங்கு நாசி அமைப்பின் தலைவராக உருவானார் அதன் பின்னர் நடைபெற்றவை நாம் அறிந்ததே.
கட்டட வடிமைப்பு துறையில் சாதிக்கத் துடித்த இளைஞன் பின்னர் யூத இனத்தை வெறுத்து அவர்களை கொன்று குவித்த கொடிய ஹிட்லராக மாறியதற்கு அவனது விண்ணப்பத்தை நிராகரித்த அந்த பேராசிரியரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

0 Comments