Subscribe Us

header ads

நேற்று திரு­நீற்றுப் புதன் : இயே­சுவின் திருப்­பா­டு­களை இன்­றி­லி­ருந்து நினை­வு­கூர்வோம்


நேற்று தவக்­கா­லத்தின் முதல் நாள். உலக கிறிஸ்­த­வர்­க­ளுக்கு முக்­கி­ய­மான நாள். விபூதிப் புதன் தொடக்கம் நாம் கிறிஸ்­துவின் திருப்­பா­டு­களை நினை­வு­கூர ஆரம்­பிக்­கின்றோம்.

'மண்­ணி­லி­ருந்து உலகில் பிறந்த மனிதா... நீ மண்­ணுக்கே தான் திரும்ப வேண்டும் ஒருநாள்' என்ற அடிப்­ப­டையில் இன்று திருப்­பலி நிறை­வேற்றும் அருட்­தந்­தையும், திரு­நீறை நம் நெற்­றியில் பூசு­கின்றார். தவக்­கா­லத்தின் திரு அடை­யா­ளா­மாக இது விளங்­கு­கின்­றது.
கடந்த வருடம் குருத்­தோலை ஞாயிறு நாளில் ஆல­யத்தில் வழங்­கப்­படும் தென்­னங்­கு­ருத்தில் செய்­யப்­பட்ட சிலு­வை­களை வீடு­க­ளி­லி­ருந்து பெற்று ஆல­யத்தில் அவற்றை எரித்துப் பெறப்­படும் சாம்­பலே இன்­றைய நாளில் நெற்­றியில் பூசப்­ப­டு­கி­றது.
என் மீட்பர் இரத்தம் சிந்­தினார் ; நான் பரி­சுத்­த­மானேன், அவர் எனக்­காக மரித்­தெ­ழுந்தார் ; நான் மறு­ரூ­ப­மானேன் - இதுதான் நாம் இன்­றைய நாளில் நம் உள்­ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்­டிய சிந்­தனை.
ஆம்... நமக்­காக இயேசு இவ்­வு­லகில் மனி­த­னாகப் பிறந்தார், பாடு­களை ஏற்றார், மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்­தெ­ழுந்தார்...இதுதான் தவக்­கா­லத்தில் நாம் சிந்­திக்க வேண்­டிய தியானம். நம்­மிடம் இயேசு கேட்­பது, அது மன மாற்றம். நம் மனதின் அழுக்கைக் களைந்து விட்டு, முழு­மை­யாக பரி­சுத்­த­ம­டைய வேண்டும்,பாவத்­தி­லி­ருந்து மீள வேண்டும் என்­ப­தையே அவர் விரும்­பு­கிறார்.
அதை­விட்டு, தவக்­கா­லத்தில் மட்டும் ஒறுத்தல் செய்து, பரி­சுத்­த­வா­னாக வாழ்ந்­து­விட்டு, மீண்டும் செய்த தவ­றையே செய்ய ஆரம்­பிப்­ப­தல்ல. தவக்­கா­லத்தின் நாற்­பது நாட்­களும் நாம் என்ன செய்­கின்றோம்..? பாவம் செய்யக் கூடாது.... ஒறுத்தல் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும் என்­று­தானே நினைக்­கின்றோம்.
சிலர் மது பாவ­னையை இந்த நாற்­பது நாட்­களும் விட்­டு­வி­டு­வார்கள்.. ஆனால், உயிர்த்த ஞாயி­றன்று ஒட்டு மொத்­த­மாக மது அருந்தி தமது தவக்­கா­லத்தை முடித்துக் கொள்­வார்கள்.
அதே போன்று, சிலர் தவக்­கா­லத்தில் நாள்­தோறும், திருப்­பலி ஒப்புக் கொடுப்­பார்கள். ஆனால், உயிர்த்த ஞாயிறு முடிந்­ததும் அதைக் கைவிட்டு விடு­வார்கள். அய­ல­வ­ருடன் சண்டை சச்­ச­ர­வில்­லாமல் சமா­தா­ன­மாக இருப்­பார்கள். ஆனால், தவக்­காலம் முடிந்­ததும், பழை­ய­படி அய­ல­வ­ருடன் மோத ஆரம்­பித்து விடு­வார்கள்.

இது­வல்ல, கிறிஸ்து எதிர்­பார்க்கும் மன மாற்றம். நாம் முழு­வ­து­மாக பாவத்­தி­லி­ருந்து விடு­பட்டு, வாழ்நாள் முழு­வதும் நல்ல கிறிஸ்து + அவ­னாக - அவ­ளாக வாழ வேண்டும் என்­ப­தைத்தான்.
எனவே, இன்­றைய நாளில், திரு­நீறை எமது நெற்­றியில் பூசிக் கொண்ட நாம், இன்­றி­லி­ருந்து எம்மை எம் பாவ வாழ்­வி­லி­ருந்து மீட்­டெ­டுப்போம். எமக்கு இவ்­வு­லகில் எது­வுமே நிரந்­த­ர­மல்ல. நம் உயிர் கூட...! எந்த நேரமும் எம்மை மரணம் ஆட்­கொள்­ளலாம்...மண்ணுக்கே திரும்பலாம்...நாம் வாழும் இந்த இடைப்பட்ட காலத்தில் பாவம் செய்யாதிருக்க முயற்சிப்போம்.
கிறிஸ்துவின் பணிவாழ்வை பின்பற்றி அவருடன் ஒப்புரவாக, இன்றைய நாளில் உறுதி கொள்வோம். தவக்காலத்தை முன்னெடுப்போம்.

Post a Comment

0 Comments