முன்னைய காலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் மக்களிடம் வந்து வாக்கு கேட்கையில் வாக்காளர்கள் புருவம் உயர்த்தி வேட்பாளர்களைப் பார்ப்பர்.
ஆனால் தற்போது புத்தளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு, விழிப்பூட்டல் செயற்பாடுகள், சந்திப்புகள், கருத்தாடல்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஈடுபாடுகள், புதிய தலைமுறையினரின் ஆர்வங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு தொடர்பு சாதன செயற்பாடுகள் நமது புத்தளம் பிரதேச அரசியல் செல் நெறியில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய பரிமாணமும், இயக்கு விசையும் ஆகும்.
வேட்பாளர்கள் கூட தமது நிலைப்பாடுகளில் அவ்வப்போது சலனம் அடையும் நிலைகளைக் கூட இன்றைய புத்தளம் அரசியல் அதிர்வலைகளின் போக்கில் அவதானிக்கலாம்.
-Muhusi Rahmathullah-


0 Comments