Subscribe Us

header ads

வாக்குப் பலத்தினால் தேர்தலையும் வென்று விட்டோம்.. இருந்தும், எங்கே போகிறது எம் சமூகம்?

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின் எங்கள் நாட்டில் நடப்பது என்ன? அதுவும் எங்கள் சமூகம் எந்த திசையை நோக்கி போய் கொண்டிருக்கிறது? கடந்த தேர்தலில் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையானோர் மற்றைய தமிழ் பேசும் மக்களுடன் சேர்ந்து தற்போதைய ஜனாதிபதியை தம் வாக்கு பலத்தினால் தெரிவு செய்து வெற்றியுரச்செய்திருக்கின்றனர்.

அதே வேலை கணிசமான பெரும்பான்மை சமூகத்தினரும் அதைத்தான் செய்திருக்கின்றனர். ஆனால் சில சகோதரர்கள் இதன் பின் எடுத்திருக்கும் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. அனேகமாக முக நூல்களில் எங்கள் சமூகத்தினால் மட்டும் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பது போன்ற பதிவுகளை பதிவு பண்ணுகின்றனர்.

தேர்தலுக்கு முன் இருந்த மன நிலையோ வேறு விதமாக இருந்தது. எங்கள் சமூகத்திற்கு ஒன்றுமே அவசியம் இல்லை ஆனால் சமாதானத்துடனும் மரியாதையாகவும் வாழும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தால் அது போதும் என்ற மனநிலையும் பதிவுகளும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இப்பொழுது நடப்பது என்ன?. கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளிலும் பேருவலை போன்ற இடங்களில் அரசியல் குரோதம் காரணமாக கைகலப்புகளும் வாய்ச்ச்ண்டைகளும் தினந்தோறும் நடைபெற்று வருவதாக எமக்கு அறிய கிடைக்கின்றது. இந்த சூழ்நிலை மற்ற பெருன்பான்மை சமூகத்தினரோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது கணிசமான வேறுபாட்டை காட்டுகின்றது.

இது கவலைக்கிடமான ஒரு நிலைமை ஆகும். அனால் அக்குரணை மாவனெல்லை மல்வானை திஹாரியை, காலி போன்ற இடங்களில் ஒரு சம்பவம் இல்லாமல் அமைதியாக காணப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றது.

அமைச்சு பதவிகள் நியமிக்கப்படும் பொழுது எங்கள் சமூகத்தின் பங்களிப்புக்கு சரியான முறையில் அமைச்சுப்பதவிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இருந்தாலும் இதில் சில அரசியல் லாபத்தை எதிர்பார்த்திக்கும் சில காட்சிகளு சில சக்திகளும் அது தவறு இது தவறு என்று அரசாங்கத்த்ற்கே யோசனை அளிக்கும் பதிவுகளை பதிந்து வருகின்றது. இதுவும் எங்கள் சமூகத்த்ற்கு லாபம் தரக்கூடிய செயற்பாடுகளாய் இல்லை.

இன்னும் ஒரு முஸ்லிமை கேவலப்படுத்தி பின்னுக்குத்தள்ளி தான் எப்படி முன்னுக்கு வருவது என்று ஒரு நோக்கத்தில் சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. இன்னொரு முஸ்லிம் சகோதரனுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற நோக்கம் தான் இவர்களின் பதிவு சொல்கிறது.

அதுவும் சில விஷயங்களை எங்கள் சமூகத்தின் நலனுக்காக விட்டுக்ககொடுப்பத்தையும் விட்டு முழு நாட்டையும் குழப்பும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றது கவலைக்கிடமான விஷயமாகும் . இவர்களின் செயல்பாட்டினால் எங்கள் சமூகத்த்ற்கு எந்த விதமான அவமானங்களும் சஞ்சலங்களும் வரும் என்பதை இவர்கள் யோசிப்பது இல்லை. எல்லா மனிதர்களுக்கும் விருப்பு வெறுப்பு அபிலாஷைகள் இருக்கும் அதே போல் அரசியலில் ஈடுபடவும் நோக்கங்கள் இருக்கும்.

அதற்காக இந்த விதமான ஈனச்செயல்களை செய்பவர்களை எங்கள் சமூகம் கட்டாயம் கண்டிக்க வேண்டும்.

வஸ்ஸலாம்

ஆஷிக் நூர் முஹம்மது.

Post a Comment

0 Comments